சமூக இடைவெளி இருவரி விழிப்புணர்வு வாசகம் ! கவிஞர் இரா .இரவி !




சமூக இடைவெளி
இருவரி விழிப்புணர்வு வாசகம் !
கவிஞர் இரா .இரவி !

விழித்திரு தனித்திரு
வள்ளலார் சொன்னதை நினைத்திரு !

விலகி விலகி நின்றால்
வரவே வராது தொற்று !

தீண்டாமை பாவச்செயல் அன்று
தீண்டாமை நன்று இன்று !

கிருமி ஒழியும் வரை
கொஞ்சம் விலகி இருங்கள் !

ஒருவரை ஒருவர் ஒட்டாமல் நின்றால்
ஒட்டாது உங்களை மற்றவர் கிருமி !

வாகன இடைவெளி விபத்தைத் தடுக்கும்
மனித இடைவெளி நோயினைத் தடுக்கும் !

கருத்துகள்