கரோனா! கவிஞர் இரா .இரவி !




கரோனா!   கவிஞர் இரா .இரவி !

தனித்திரு ! விழித்திரு ! வள்ளலார் சொல்லியதை
தனித்திருந்து விழித்திருந்து விரட்டிடுவோம் !

வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்பது
வேதனை என்றாலும் சோதனைக் காலம் இது !

பொறுத்து இருந்தால் நலமாய் வாழலாம்
பொறுமை மிகவும் அவசியம் பொறுத்திடுங்கள் !

இத்தாலி நிலைமை இந்தியாவிற்கு வராமலிருக்க
இந்தியர் அனைவரும் ஊரடங்கிற்கு ஒத்துழைப்போம் !

வந்தபின் வருந்துவதை விட வருமுன் காப்பு சிறப்பு
வாசிப்பை நேசித்து புத்தகம் வாசித்து புத்துணர்வு பெறுங்கள் !

வதந்திகளை நம்ப வேண்டாம் பரப்ப வேண்டாம்
வரவிடாமல் ஒழித்துக் கட்டுவோம் கரோனாவை !   

--

.

கருத்துகள்