வர்ணஜாலம்! கவிஞர் இரா. இரவி.




வர்ணஜாலம்!

கவிஞர் இரா. இரவி.

******

வர்ணஜாலம் தினமும் நமக்கு காட்டிடும்
வானத்தை உற்று நீங்கள் பாருங்கள்!

கவலை இருந்தால் காணாமல் போகும்
கண்ணிற்கு விருந்தாக காட்சித் தரும்!

வானவில் தோன்றும் சில நிமிடங்கள்
வண்ணத்தின் அழகு வார்த்தையில் அடங்காது!

அதிகாலையில் வானம் ஒரு மாதிரி
அந்தி மாலையில் வானம் வேறு மாதிரி!

பொன்னைக் கொட்டியது போலவே இருக்கும்
பார்வைக்கு பொன்னாகவே காட்சித் தரும்!

நீல உடை கட்டியிருக்கும் ஒரு நேரம்
நித்தமும் ஒவ்வொரு ஆடை அணிந்திருக்கும்!

பார்த்து ரசிக்க விழி இரண்டு போதாது
பரவசம் தரும் புத்துணர்வும் தரும்!

இயந்திரமயமான உலகில் இயந்திரமான மனிதர்கள்
எப்படி   வானத்தை ரசிப்பார்கள் நேரமில்லை!

கருத்துகள்