கருப்பு! கவிஞர் இரா. இரவி

கருப்பு!
கவிஞர் இரா. இரவி.
******
உழைப்பின் உன்னத நிறம் கருப்பு
உதிரத்தின் நிறம் அனைவருக்கும் சிவப்பு!

ஏற்றத் தாழ்வு வேண்டாம் நிறத்தால்
இரண்டையும் ஒன்றாகப் பார்த்திடல் வேண்டும்!

வெள்ளை உயர்வு என்பதும் தவறு
கருப்பு தாழ்வு என்பதும் தவறு!

வெள்ளைதான் வேண்டுமென்ற பிடிவாதத்தால்
வாலிபர்கள் மணமாகாமல் தவிக்கின்றனர்!

நிறபேதம் விடுத்து நேசிக்க வேண்டும்
நிறத்தில் பேதமில்லை யோசிக்க வேண்டும்!

கருப்பு வேண்டாம் என்று சொல்லியதால்
காளையர் பலர் முதிர்காளை ஆகினர்!

தவறான கற்பிதங்களைத் தகர்த்தெறியுங்கள்
தன்னம்பிக்கை பெறுங்கள் கருப்பு நிறத்தோர்!

கருப்பினத்தில் பிறந்து சாதித்தோர் பலருண்டு
கருப்பு தாழ்வு அல்ல கர்வம் பெறுங்கள்!

கருத்துகள்