தலையெழுத்து ! கவிஞர் இரா .இரவி !



தலையெழுத்து ! கவிஞர் இரா .இரவி !

கற்பிக்கப்பட்ட கற்பனை 
கட்டுக்கதை உண்மையன்று !

முடிவெட்ட தலை தராதவன் 
முழுவதும் எழுதிட தந்திருப்பானா ?

வாழ்நாள் முழுவதையும் எழுதிட 
தலை என்ன காகித ஆலையா ?

காலங்காலமாக பலரும் 
கதைத்து வந்த பொய் !

அப்படி ஒன்றும் இல்லை 
அறிந்திடுக தெரிந்திடுக தெளிந்திடுக ! 

தலையெழுத்தின் மொழி என்ன 
தெரியுமா உங்களுக்கு வாசிக்க !

விதி என்று ஒன்றுமில்லை 
மதியால் சிந்தித்து சிறந்திடலாம் !

மனிதர்களுக்கு மட்டும்தானா விதி ?
மற்ற விலங்குகளுக்கும் உண்டா ?

தலையில் படப்பிடிப்புக் கருவியில் 
தலை எழுத்து அகப்படவில்லை !

இறைவன் எழுதியது என்றால் 
இறைவனுக்கு இதுதான் வேலையா ?

இல்லாத ஒன்றான தலையெழுத்தை 
இருப்பதாக எண்ணி வருந்தாதீர் !  

.

கருத்துகள்