யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !



யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

உனக்காக  நான் எனக்காக நீ 
உயிர் உள்ள வரை பிரியோம் !

உடல் இரண்டு உயிர் ஒன்று 
உள்ளம் இரண்டும் ஒன்றானது !

உலகமே எதிர்த்தாலும் நான் 
உந்தன் கரம் பிடிப்பேன் !

நான் இன்றி நீ இல்லை 
நீ இன்றி  நான் இல்லை !

என் வாழ்வு உன்னோடுதான் 
உன்னைப் பிரிந்தால் உயிர் வாழேன் !

இப்படியெல்லாம் சொன்ன அவள் 
இன்று என்னோடு இல்லை !

காலத்தின் கோலம் பிறந்தோம் 
கள்ளி என்னை மறந்தாள் !

வேறு ஒருவன் கரம் பிடித்து 
வசதியாக குழந்தைகளுடன் !

யாயும் ஞாயும் யாரா கியரோ
யாரோவாகிப் போன அவள் ! 
.



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்