தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !



தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !

தொலையாத வார்த்தைகள் தமிழில் நிறைய 
தொன்றுத்  தொட்டு வரும் வார்த்தைகள் அவை  !

தொலைந்து வருகின்றன நாளும் இன்று 
தமிழில் தமிங்கிலம்  தடையின்றிக் கலக்குது 

தந்தையை அப்பா என அழைப்பது இல்லை 
டாடி என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்  !

அன்னையை அம்மா என அழைப்பது இல்லை 
மம்மி என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்  !

மம்மி என்றால் செத்த பிணம் என்று பொருள் 
மடமையை அறிந்து மாற்றிக் கொள்ளுங்கள் !

தமிழில் ஒரு ஒருஎழுத்துக்கும் பொருள் உண்டு 
தரணியில் பிறந்த முதல் மொழி நம் தமிழ்மொழி !

தமிழின் பெருமையை தமிழர்கள் அறியவில்லை 
தன்னிகரில்லா சிறந்த மொழி நம் தமிழ்மொழி !

சொற்களின் சுரங்கம் களஞ்சியம் நம் தமிழ்மொழி 
சொக்கத்தங்கத்தைவிட மேலானது  நம் தமிழ்மொழி !

வார்த்தைகளின் வற்றாத நதி தமிழ்மொழி
வளங்கள் மிக்க வனப்பு மொழி தமிழ்மொழி!

டாடி மம்மி வார்த்தைகளில் இல்லாது தொலையட்டும் 
தமிழகத்தில் தமிழே எங்கும் எல்லோரிடமும் ஒலிக்கட்டும் !

தொலையாத வார்த்தைகள் வரிசையில் என்றும் 
தமிழில் அம்மா அப்பா நிரந்தரமாக இருக்கட்டும் !

கருத்துகள்