சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !



சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! 

அடி கொள்ளை 
தா பங்கு 
அரசியல் கொள்கை !

அசந்தால் 
கடவுளை விழுங்கிடும் 
மகாதேவன்கள் !

மன்னர்களை மிஞ்சினார்கள் 
துணை வேந்தர்கள் 
சொத்துச்  சேர்ப்பதில் !

துச்சம்தான் சிலருக்கு 
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு 
மேலாண்மை வாரியம் ?

ஒன்று செய் நன்று செய் 
இன்றே செய் 
காலம் கடத்தாதே !

காற்றுள்ளபோது துற்று 
பதவியிலிருக்கும்போதே அடித்திடு 
அரசியல் வேதம் ! 

ஏழைகளின் பழம்
பணக்காரர்களின் பழமானது 
கொய்யா  !

இழவைத் தடுக்க வேண்டினால்
திருமணம் செய்து வைக்கின்றனர் 
அரசியல் கூத்து !

உருவம் ஒன்று 
சுவை வேறு 
பூசணி  தர்பூசணி ! 

கருத்துகள்