ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி ! 

உயிரற்றவைதான் 
பலரை உயிர்ப்பிக்கும் 
புத்தகம் ! 

பிறருக்குப் புரியாது 
பெற்றவளுக்குப் புரியும் 
மழலை மொழி ! 

வேட்டு வைத்தது 
வெட்டியான் வேலைக்கும் 
மின்சாரத் தகனம் ! 

அதிகமானது 
பிற மாநிலத்தில் 
தமிழ்ப் பற்று ! 

வேண்டவே வேண்டாம் 
வறட்டு கெளரவம் 
கொலைகள் கொடூரம் ! 

மனிதனை 
விலங்காக்கும் 
சாதிவெறி ! 

மனிதனுக்கு அழகு 
மனதினில் 
மனிதநேயம் ! 

குறைக்கும் 
வாழ்நாளை 
கவலை ! 

உணர்கிறோம் 
பிரிவின் போது 
மனைவியின் அருமை 

இரண்டே வரிகளில் 
இணையற்ற இலக்கியம் 
திருக்குறள் ! 

மனிதர்கள் மட்டுமல்ல 
பேருந்துகளும் விடுகின்றன 
பெருமூச்சு !

கருத்துகள்