ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி .

ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி . 

ஆசைப்பட்டது காளான் 
ஆசையை வெறுத்த 
புத்தரின் உயிர் ! 

அடைந்தான் பரவசம் 
சுனாமியில் தொலைந்த மகன் 
கண் முன்னே ! 

இயற்கையை நேசிக்க 
இதமாகும் 
இதயம் ! 


இருக்கட்டும் தூய்மையாக 
இரண்டும் 
அகமும் புறமும் ! 

தேவையில்லை 
ஏழைகளின் வீட்டிற்கு 
பூட்டு ! 

பெண்களுக்கு அழகு 
பொன்னகையை விட 
புன்னகை ! 

வான் மேக 
சிக்கி முக்கி உரசல் 
மின்னல் ! 

மனிதனின் 
முதல் நவீனம் 
மொழி ! 

முட்டாள் 
மகுடி ஊதுகிறான் 
காதில்லாப் பாம்பிடம் ! 

அழிவிற்கு 
வழி வகுக்கும் 
ஆயுதம் ! 

உணர்ச்சி வசமின்றி 
அறிவுவசம் எடுப்பது 
உத்தி !

கருத்துகள்