ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி ! 

மதித்தால் 
மதிக்கும் 
குழந்தை ! 

உடலில் இருக்கலாம் 
உள்ளத்தில் இல்லை அழுக்கு 
உழைப்பாளி ! 

உருவாக்கும் 
முன்னேற்றம் 
மனஎழுச்சி ! 

விதைத்தால்தான் முளைக்கும் 
நினைத்தால்தான் நடக்கும் 
வாழ்க்கை ! 

பிறருக்காக வாழ் 
இறந்த பின்னும் 
வாழ்வாய் ! 

சிந்தித்துப் பார் 
பகையாளி மனநிலையில் 
விலகும் பகை ! 

சுவர் இன்றி 
சித்திரம் உண்டு 
காகிதத்தில் ! 

காலம் கடந்து விழித்தால் 
காலம் கடந்துதான் விடியும் 
வாழ்க்கை ! 

அஞ்சாதே 
அஞ்சினால் கூடும் 
துன்பம் ! 

முடியாததை முடித்திடும் 
நடக்காததை நடத்திடும் 
நட்பு ! 

வீணாக்குகின்றான் சோம்பேறி 
விவேகமாக்குகின்றான் அறிவாளி 
நேரம் ! 

பாராட்டுக 
திறமை இருந்தால் 
பகைவனையும் !

கருத்துகள்