படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !


படத்திற்கு கவிதை !  கவிஞர் இரா .இரவி  !



மலர்களின் ராசா ரோசா என்றாலும் 
மங்கையர் பலர் சூடுவது மல்லிகை !
மன்னன் மயங்கும் மல்லிகை 
மக்கள் மயங்கும் மல்லிகை !
மதுரைக்குப் பெருமை  மல்லிகை
மண்ணுக்குப் பெருமை   மல்லிகை !
வெள்ளை நிற  மல்லிகை
கொள்ளைக் கொள்ளும் மல்லிகை !
வாசனை மிக்க மல்லிகை
நேசம்  கொள்ளும் மல்லிகை !

கருத்துகள்