தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு !

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு !

ஆறோடும் நீரோடும் ! கவிஞர் இரா .இரவி !

ஆறோடும் நீரோடும் போராடியே உழவர்களின் 
ஆருயிர் பிரிந்து வருவது வேதனை வெட்கம் !

ஆற்றில் வெள்ளம் வருகின்றது சிலநேரம் 
ஆற்றுப்படுத்திச்  சேமிக்க வழி இல்லை !

ஆற்றுமணல் கொள்ளை நிறுத்தப்பட வேண்டும் 
அந்நியர் குளிர்பானக்  கொள்ளை ஒழிக்க  வேண்டும் !

விவசாயத்தின் உயிர் மூச்சு  தண்ணீர் என்பதால் 
விவசாயம் பொய்த்திட மூச்சை விடுகிறான் விவசாயி !

உயிர் வாழ உணவு வேண்டும் உணருங்கள் 
உணவு வழங்க உழவன் உயிர் வாழ வேண்டும் !

விவசாயிகளின் எண்னிக்கை குறைவது இழுக்கு 
விவசாயம் பெருகினால்தான் நாடு செழிக்கும் !  

உழவுத் தொழிலே சிறந்தது என்று அன்றே
உரைத்தார் உலகப் பொதுமறை தந்த வள்ளுவர் !

இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று 
அன்றே உரைத்தார் உத்தமர் காந்தியடிகள் !

முதுகெலும்பை முறிக்கும்படி  விவசாயத்தை 
மண்ணில் அழித்து வருகின்றனர் சிலர் !

விவசாயம் வாழ விவசாயி வாழ சிந்தியுங்கள் 
விவேகமாக திட்டங்கள் தீட்டி செயல்படுத்துங்கள் !

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னால்  
கண்டுகொள்ளாமல் இருப்பது முறையோ ?சரியோ ?

காவிரி மேலாண்மை வாரியம் நியமித்தால் 
காவிரிக்காகச் சண்டைப் போட அவசியம் இல்லை !

வருடா வருடம் கருநாடகத்திடம் கெஞ்ச வேண்டாம் 
வருடா வருடம் கருநாடகம்  மிஞ்ச வேண்டாம் !

பகிர்ந்து உண்டு வாழ வழி செய்திட வேண்டும் 
பகிர்தலில்  நல்ல நியாயம் இருக்க வேண்டும் !
முல்லை பெரியாறு நீர் உயர்த்திட வேண்டும் 
முரண்டு பிடிக்கும் கேரளா திருந்திட விடும் !

புதிதாக யாரும் இனி அணை கட்டக்கூடாது 
பழைய அணைகளை பராமரித்தாலே போதும் !

உணவு வழங்கிடும் உழவன் தண்ணீரின்றி
உயிர் விடுவது உலகிற்கு அவமானம் ! வெட்கம் !

கருத்துகள்