நன்றி ! தினமலர் நாளிதழ் ! கவிஞர் இரா .இரவி !

நன்றி ! தினமலர் நாளிதழ் ! கவிஞர் இரா .இரவி !

தினமலர் நாளிதழில் ஒரு கட்டுரை வந்தால் நூறு கட்டுரைகள் வந்ததற்கு சமம்  என்பது உண்மை .என்னுடைய படைப்புகள் பல் இதழ்களில் வருகின்றன .ஆனால் தினமலர் நாளிதழில் வந்தால் அதன் வீச்சு மிக மிக அதிகம் .

இன்று தினமலர்  என்பார்வையில்  நான் எழுதிய " வாழ்க்கையை ருசிக்க புரிந்து கொள்வோம் " கட்டுரை பிரசுரமானது .இன்று  காலையில் இருந்து  நூற்றுக்கும் மேலான அலைபேசி அழைப்பில் பாராட்டு ,வாழ்த்து , குறுஞ்செய்தி  என வந்து கொண்டே இருக்கின்றது .


தமிழ்த் தேனீ இரா  .மோகன் ,தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் திருமலை ,மனிதத் தேனீ
இரா .சொக்கலிங்கம் ,பொறியாளர்  புரவலர் ஜ .சுரேஷ், கலசலிங்கம்  பல்கலைக் கழக கலை &அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ச .சந்திரா ,பட்டிமன்றத் பேச்சாளர்கள் திருநாவுக்கரசு ,சங்கீத்  ராதா மற்றும்
முகம் தெரியாத முன்பின் அறிந்திராத பலரும் மதுரை மட்டுமல்ல பல ஊர்களில் இருந்து பாராட்டினார்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ,இராமநாதபுரம் ,கமுதி   ,காரைக்குடி  என  பல ஊர்களில் இருந்து அழைப்பு வந்த வண்ணம் உள்ளது .
வழக்கறிஞர்கள் ,பேராசிரியர்கள் ,ஆசிரியர்கள் ,நடத்துனர் ,காபி டி கடைகள் சங்க முன்னாள் தலைவர் இராசகோபால் இப்படி பல தரப்பட்ட பொது மக்கள் பாராட்டினார்கள் .
பிற்பகலில் பாராட்டியவர்கள் ;
கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன், முனைவர் ஞா.சந்திரன் ,கலாம் கே .ஆர் ,சுப்பிரமணியன்  ,கவிக்குயில் இரா .கணேசன் ,தலைமை ஆசிரியர் தென்னவன் ,அம்பாசமுத்திரம் தலைமைக்காவலர் சுசிலா ,செவிலியர் கார்த்திகா ,தினமலர் நண்பர்கள் வாட்சப் குழு அசோக்,கொட்டாம்பட்டி நடராசன் ,தன்பால் சிங் ,வள்ளியம்மை இப்படி இன்னும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது பாராட்டு .

இதற்கு காரணமாக இருந்த தினமலர் நாளிதழுக்கு நெஞ்சார்ந்த நன்றி .
நன்றி

கருத்துகள்