தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பணத்தின் மறுபக்கம் ! கவிஞர் இரா .இரவி !

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

பணத்தின்   மறுபக்கம் ! கவிஞர் இரா .இரவி !

பணத்தின்   மறுபக்கம் உழைப்பு உள்ளன 
பண்போடு உழைத்துப் பணம் ஈட்டுகின்றனர் !

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி  செய்திட 
அவசியம் தேவைப்படுகின்றது பணம் !

நேர்மையான வழியில் வந்த பணம் 
நிம்மதியான துக்கம் தந்து மகிழ்விக்கும் !

குறுக்கு வழியில்  வந்த பணம் 
குதூகலத்தை அழித்துக் கவலை தரும் !

பணம் ஈட்டுவது தவறில்லை  ஆனால் 
பணம் பணம் என்று அலைவது தவறு !

வந்த வருமானத்தில் சிறு பகுதியாவது 
வறியவர்க்கு உதவி செய்திட வேண்டும் !

ஏழைகளுக்கு உதவுவதில் இன்பம் உண்டு 
ஈந்துப் பாரத்தால் அவ்வின்பம் தெரியும் !

வாரி வழங்கிடும் வள்ளல் ஆகாவிடினும் 
வழங்கவே வழங்காத கஞ்சனாக வேண்டாம் !

பணத்தைவிட உயர்வானது நல்ல குணம் 
பணக்காரனைவிட நல்லவனே  என்றும் வாழ்வான் !

மனிதாபிமானம் மனதில் என்றும் இருக்கட்டும் 
மனிதனைவிட பணம் என்றும் பெரிதல்ல !

அரசாங்கத்தால் அச்சடிக்கப்பட்ட காகிதம்தான் 
அதைத்தாண்டி வேறு ஏதும் சிறப்பில்லை !

பணத்தாசையால் பலர் நிம்மதி இழந்தனர் 
பணத்தாசையால் பலர் உறக்கம்  இழந்தனர் !

ஆசையே அழிவுக்கு காரணம்என்றார் புத்தர் 
ஆசையை அழிக்காவிடினும் குறைத்து வாழ்வோம் !  
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்