நன்றி தினமணி கவிதைமணி

நன்றி தினமணி கவிதைமணி 



http://www.dinamani.com/specials/kavithaimani/2016/nov/14/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-

-- முகப்பு  ஸ்பெஷல்ஸ்  கவிதைமணி

வழி தவறிய பயணங்கள்: 

 கவிஞர் இரா .இரவி !

By கவிதைமணி  |   Published on : 14th November 2016 04:58 PM  |   அ+அ அ-  |  
இளைய தலைமுறையில் பலரின் பயணங்கள் 
இன்று ஆனது வழி தவறிய பயணங்கள் !
கற்கும் வயதில் மது குடிக்கும் கொடுமை 
கேடு தரும் மதுவை விரும்பி நாடும் அவலம் !
குடி குடியைக் கெடுக்கும் என்பதை படித்துவிட்டு 
குடிக்கும் படித்தவர்கள் திருந்துவது என்றோ ?
என்றைக்காவது என்று தொடங்கிய பழக்கம் 
என்றும் வேண்டும் என்றான இழிநிலை !
நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம் 
நாளும் மது அருந்துவதில் தொடங்குகின்றது !
அடி தடி சண்டை வந்து கடைசியில் 
அன்பு முறிந்து நண்பன் பகைவனாகின்றான் !
காவல் நிலையம் வரையில் வழக்குகள் சென்று 
காப்பாற்றப்   பெற்றோர் வரும் நிலை வருகின்றது !
சனி ஞாயிறு மட்டும் என்று என்கின்றனர் 
சதா குடி என்று மாறி விடுகின்றனர் !
உலக அளவில் இளைஞர்கள் அதிகம் 
உள்ள நாட்டிற்கு  குடியால் கேடு வந்தது !
மது குடிக்கும் காட்சிகள் இல்லாத 
திரைப்படங்களே இல்லை என்றானது !
மது மறந்த  இளைஞனுக்கும் இந்த 
மட்டமான காட்சிகள் நினைவூட்டுகின்றன !
குடி விற்பனை இலக்கு ஏன் எட்டவில்லை என்று 
கேட்டதற்கு கடைக்காரர் சொன்னாராம் !
பொறியியல் கல்லூரி விடுப்பில் உள்ளது 
திறந்ததும்  எட்டி விடுவேன் என்றாராம் !
மாணவரே இளையோரே  சாதிக்க பிறந்தவர்கள் 
மதுவிற்கு அடிமையாகி வாழ்வை இழக்கலாமா ?
உடலுக்கும் உயிர்க்கும் கேடு தரும் மது வேண்டாம் 
உனது எதிர்காலம் சிதைக்கும் மது வேண்டாம் !
உங்களுடைய இலக்கை அடைய வேண்டுமானால் 
உங்களின் பயணப்பாதை சரியாக இருக்க வேண்டும் !

கருத்துகள்