ஹைக்கூ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ! கவிஞர் இரா .இரவி !

வசப்படுவதில்லை 
வாசிக்கும் அனைவருக்கும் 
புல்லாங்குழல் !

வைத்துக்கொள்வதில்லை 
வந்த காற்றை 
புல்லாங்குழல் !

வரைந்திட்ட 
ஓவியர் யாரோ 
மயில் தோகை !


தோற்றுப்போனேன் 
பிடிக்க முயன்று 
வண்ணத்துப்பூச்சி !


முறைத்துப்பார்த்தான் 
சோம்பேறி 
வண்ணத்துப்பூச்சி !

ஞானப்பால் வேண்டாம் 
பசும்பால் போதும் 
பசித்து அழும் குழந்தை !

 
மூலமொழி 
உலகமொழி ஆங்கிலத்திற்கும்
தமிழ் மொழி !

வசந்தத்திற்கு மகிழவுமில்லை 
இல்லை உதிர்வுக்கு வருந்தவுமில்லை   
மரம் !

மகிழ்ச்சி என்று தொடங்கி 
துன்பத்தில் முடிந்தது 
மது !

மனிதர்களில் மட்டுமல்ல 
புறாக்களிலும் உண்டு 
கருப்பு வெள்ளை !

வழிவகுத்தன 
விபத்திற்கு 
ஆபாச சுவரொட்டிகள் !

உண்டால் பலம் 
கிளைகள் பலமில்லை 
முருங்கை !

பெருகியது 
முதிர்கன்னிகள் மட்டுமல்ல 
முதிர் காளைகளும்தான் !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்