மதுரை இலக்கிய பேரவையின் தலைவர்  திரு .சண்முக திருக்குமரன் தந்த தலைப்பு ! சுதந்திர வேர்களைத்   தேடி ! கவிஞர் இரா .இரவி !

மதுரை இலக்கிய பேரவையின் தலைவர்
திரு .சண்முக திருக்குமரன் தந்த தலைப்பு !

சுதந்திர வேர்களைத்   தேடி ! கவிஞர் இரா .இரவி !

சுதந்திர வேர்களைத்   தேடி ! கவிஞர் இரா .இரவி !

விழுது விட்ட பெரிய ஆலமரங்களை 
விழாமல் காப்பது அதன்  வேர்களே !

இன்பமான விடுதலையைப் பெற்றுத் தந்தது 
இன்னுயிர் ஈந்து வழங்கிய முன்னோர்கள் !

காந்தியடிகள் அகிம்சை வழி மாறாமல் 
காலமெல்லாம் போராடிப் பெற்றுத் தந்தார்   !

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் 
நாடு முழுவதும் படைகள் திரட்டி போராடினார் !

வ .உ .சிதம்பரம் செக்கிழுத்து கப்பலோட்டி 
வாங்க உதவினார் மக்களுக்கு விடுதலையை !

மகாகவி பாரதியார் விடுதலை குறித்து 
மகத்தான பாடல்கள் பாடி உதவினார் !

தில்லையாடி வள்ளியம்மை கடுங்காவல் பெற்று 
தியாகம் செய்து உயிர் நீத்து உதவினார் !

கொடி காத்த குமரன் கொடிக்காகவே வெள்ளையனிடம் 
கடுமையாக அடி வாங்கி விடுதலைக்கு உதவினார் !

சும்மா கிடைக்கவில்லை இனிய விடுதலை 
சோகங்கள் துயரங்கள் பெற்றுப் பெற்றனர் !

எண்ணற்றவர்கள் இனிய தியாகத்தால் 
எமக்கு வந்தது விடுதலை வணங்குகின்றோம் !

குரங்கு கையில் கிடைத்த  பூமாலை என 
கொடுமையானவர்களிடம் சிக்கியது நாடு !

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டி உயர்த்தி 
பாவம் உழவர்கள் வயிற்றில் அடிக்கும் ஆந்திரம் !

கடவுளை வணங்கிட திருப்பதி செல்லும் அப்பாவிகளை 
கட்டை கடத்த வந்தவர்கள் என்று சிறை ஆந்திராவில் !

காவிரியில் கரை புரண்டு  தண்ணீர்  ஓடினாலும் 
கல்நெஞ்சம் கொடு தர மறுக்கும் கர்நாடகம் !

பெரியாறு  அணை உடையுமென்று  பீதி  கிளப்பி 
பெரிய அளவில் நீர் தேக்கவிடாத கேரளம் !

அண்டை மாநிலங்கள் மட்டுமல்ல தமிழகத்தை 
அண்டை நாடு இலங்கையும் வஞ்சித்து வருகின்றது !

காக்கை குருவி சுடுவது போலவே இலங்கை 
கண்ணில் பட்ட மீனவர்களைச் சுட்டு மகிழ்கின்றது !

அடைந்திட்ட விடுதலையை அடைய விடாமல் 
அண்டையில் இருப்போர் தடுப்பது  முறையோ ?

போராட்டிப் பெற்ற விடுதலையின் பயனை 
பூரணமாக மக்களை துய்க்க விடுவதில்லை !

வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல்வாதிகள் 
வாயில் வந்ததைப் பேசி ஏமாற்றி வருகின்றனர் !
.
விடுதலையின் நன்மையை அடையவிடாது 
வஞ்சிப்பதை நிறுத்துங்கள் வேர்கள் மகிழும் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்