தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! வாழ்க்கையின் தூரங்கள் ! கவிஞர் இரா .இரவி !



தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

வாழ்க்கையின் தூரங்கள் ! கவிஞர் இரா .இரவி !

எவ்வளவு நாள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல 
எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியமாகும்  !

'எப்படியும் வாழலாம் 'என்று இன்று வாழ்வோர் பலர் 
'இப்படித்தான் வாழ்வோம் 'என்று இன்றும் வாழ்வோர் சிலர் !

பிறப்பிற்கும் இறப்பிற்கும் உள்ள இடைவெளி மட்டுமல்ல 
சிறப்பாக வாழ்ந்தால் இறந்தபின்னும் உண்டு வாழ்க்கை !

விரும்பி வந்ததல்ல இந்த வாழ்க்கைப் பயணம் 
விரும்பி வாழ்ந்தால் இனிக்கும் சிறக்கும் வாழ்க்கை !

பிறந்ததால் ஏதோ வாழ்கிறேன் என்பதல்ல வாழ்க்கை 
பிறந்ததால் பிறர் பயனுற வாழ்வேன் என்பதே வாழ்க்கை !

கடந்து வந்த பாதையில் கசப்புகள் இருக்கலாம் 
கவலை வேண்டாம் மறந்து விடுங்கள் நன்று !

மலரும் நினைவுகளை மலர்விக்கும் தருணங்களை 
மறுபடியும் மறுபடியும் நினைத்து மகிழுங்கள் !

 மூச்சு விடுவது மட்டுமல்ல மனித வாழ்க்கை 
முயற்சி செய்வதும் அடங்கி உள்ளது வாழ்வில் !

'வெந்த சோறை தின்று விதி வந்தால் சாவேன் என்பது 
வெட்டிப்பேச்சு வீணர்களின் சோம்பேறி உளறல் !

அர்த்தமுள்ள வாழ்க்கை அனைவரும் வாழ்ந்திடுவோம் 
அர்த்தமற்ற வாழ்வுக்கு வைப்போம் முற்றுப்புள்ளி !

பிறந்தோம் இறந்தோம் என்பது சராசரி வாழ்க்கை 
பிறந்தோம் சாதித்தோம் என்பதே சாதனை வாழ்க்கை !

காந்தியடிகள் பணத்தின் மீது என்று ஆசைப்பட்டதில்லை 
காந்தியடிகள் படம் பணம் அனைத்திலும் உள்ளது !

மகாகவி பாரதி வாழும் காலத்தில் மதிக்கப்படவில்லை 
மறைந்தபின்னே கவிஉலகம் பாராட்டி மகிழ்கின்றது !

மாமனிதர் அப்துல் கலாம் இறந்தார் உலகமே அழுதது 
மகத்தான வாழ்வு வாழ்ந்ததால் மறைந்தும் வாழ்கிறார் !

தன்னலத்தார் வாழ்க்கை இறப்போடு முடிந்துவிடும் 
பொதுநலத்தார் வாழ்க்கை இறந்தபின்னும் தொடரும் !


ஏதோ வாழ்வோம் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள் 
எதையாவது சாதிப்போம் என்ற எண்ணம் வளர்ப்போம் !

அடையவேண்டிய தூரம் பற்றிய கவலை இல்லை 
அடைந்தே தீருவோம் என்ற எண்ணம் வேண்டும் !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area

கருத்துகள்