நன்றி தினமணி கவிதை மணி

நன்றி தினமணி கவிதை மணி 

http://www.dinamani.com/kavithaimani/2016/07/25/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%C2%A0-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/article3546607.ece

முகப்பு > கவிதைமணி
திருமண நாள் : கவிஞர் இரா .இரவி
By dn
First Published : 25 July 2016 04:19 PM IST
1
வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள்
வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்னாள் !
பலருக்கு பொறுப்பும் மகிழ்வும் தந்தது
சிலருக்கு வருத்தமும் சோகமும் தந்தது !
இன்றுமுதல் இணையும் இணைகள் இவர்கள்
என்று உலகிற்கு அறிவிக்கும் அற்புதநாள் !
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டால்
உலகமே வியந்து பாராட்டுது நம்மை !
இறுதிவரை இணைபிரியாது வாழ்வோர் பலர்
இணையைப் பிடிக்காமல் பிரிந்து வாடுவோர் சிலர் !
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்
ஒருபோதும் வராது சண்டை வழக்கு ஊடல் !
நான் என்ற அகந்தை யாருக்கு வந்தாலும்
நல்ல குடும்பம் சிந்தைந்துப் போகும் !
பொறுமை இழந்து கண்டபடி பேசியதால்
பூமியில் இணைகள் பிரிந்து விடுகின்றனர் !
அன்பு செலுத்தி ஆனந்தமாய் வாழ்ந்தால்
ஆயும் இருவருக்கும் நீளும் என்பது உண்மை !
மனைவியின் மனதை மதித்து நடந்தால்
மனையில் இன்பம் பொங்கி வழியும் !
கணவன் மனதை புரிந்து நடந்தால்
கடைசிவரை பிரியாது இணைந்து வாழலாம் !
எங்கிருந்தோ இங்கு வந்த மனைவியின்
எண்ணம் அறிந்து கணவன் நடக்க வேண்டும் !
ஆணாதிக்கச் சிந்தனையை அகற்றி வாழ்ந்தால்
அகமும் புறமும் வாழ்வு அன்பாய் அமையும் !
எடுத்து எரிந்து மனைவியைப் பேசியதால்
இன்னலில் வாடி வதங்கும் கணவர் உளர் !
கணவனின் குணம் அறிந்து மனைவியும்
கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் இனிக்கும் !
வசமாகும் வானம் மகிழ்வோடு வாழ்ந்தால்
வருடா வருடம் கொண்டாடி மகிழும் திருநாள் !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்