காதல் கொலை கவிஞர் இரா இரவி


காதல் கொலை ! கவிஞர் இரா .இரவி ! 

கணினியுகத்திலும் காட்டுமிராண்டிக் காலத்தை 
கண்களில் காட்டும் உணர்வு காதல் கொலை ! 
பெரியார் இங்கே மீண்டும் பிறக்க வேண்டும் 
புத்திக்கெட்ட மனிதர்களுக்கு புத்திப் புகட்ட வேண்டும் ! 
சொந்த மகளென்றும் பாராமல் கொல்கின்றனர் 
சொந்த மகனென்றும் பாராமல் கொல்கின்றனர்! 
கோடிப் பணம் கொட்டிக் கொடுத்தாலும் 
கொன்ற உயிரைத் திரும்பத் தரமுடியாது ! 
பகுத்தறிவைப் பயன்படுத்துவது மனிதனுக்கு அழகு 
பகுத்தறிவைப் பயன்படுத்தாதது மனிதனுக்கு இழுக்கு ! 
கௌரவக் கொலை என்பதில் கௌரவம் இல்லை 
கேவலம் என்பதை உணர்ந்து திருந்திடுங்கள் ! 
ஆணவக்கொலையில் உள்ள ஆணவம் 
அழிவுக்கு வழி வகுக்கும் மாறிடுங்கள் ! 
சாதிவெறி என்பது மனிதனை விலங்காக்கும் 
சாதிவெறி வேண்டாம் மனிதனாய் வாழ்வோம் ! 
சாதி என்பது ஆதியில் இல்லை அறிந்திடுங்கள் 
சாதி பாதியில் வந்திட்ட தொல்லை தெரிந்திடுங்கள் ! 
உயர்ந்தவர் தாழ்ந்தவர் சாதியில் இல்லை 
ஒரு நிமிடம் சிந்தித்தால் சிந்தாது ரத்தம் ! 
ஊர் பேசும் என்று அஞ்சுவதை நிறுத்துங்கள் 
உங்கள் குழந்தைளை மகிழ்வாய் வாழவிடுங்கள் ! 
உண்மையான பக்குமான காதல் என்றால் 
ஒருபோதும் மறுப்புச் சொல்லாதீர்கள் ! 
மனம் உவந்து ஏற்றுக் கொள்ளுங்கள் 
மகிழ்ச்சிப் படுத்துங்கள் குழந்தைகளை ! 
இன்று நேற்று உருவானது அல்ல காதல் 
ஆதாம் ஏவாள் காலத்திலே உருவானது ! 
நல்ல காதலை முழுமனதுடன் அங்கீகரியுங்கள் 
நல்ல மனிதர்களாக சமுதாயத்தில் மதிக்கப்படுவீர்கள் ! 
வேண்டாம் வேண்டாம் இனிமேல் வேண்டாம் 
காதல் கொலை இனி எங்கும் வேண்டவே வேண்டாம் !

கருத்துகள்