நன்றி .பாக்யா வார இதழ் ! படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !


நன்றி .பாக்யா வார இதழ் !

படத்திற்கு கவிதை !  கவிஞர் இரா .இரவி !

பசி பசி என்றால் 
புடைத்து உலை வைத்து 
பொங்கித்தான் பசியாறவேண்டும் 

அரிசியில் கல் இருக்கும் 
சொல்வார்கள் ஆனால் 
கல்லில் அரிசி உள்ளன !

குத்த வச்ச மனுசா 
உலையை வச்சா 
சோறு பொங்கலாம் !

அரிசிகள் அந்தரத்தில் நிற்கின்றன
பறை சாற்றுகின்றன 
புகைப்படக் கலைஞரின் திறனை !

புடைக்காமல் 
சோறு ஆக்கினால் 
கத்துவாய் கல் என்று !

தின்னாதே  அரிசி 
மழை வரும் 
எழுபதாம் திருமணத்தில் !


முதுமையிலும் 
இணை பிரியாத இணையர் 
இளையோருக்குப் பாடம் !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்