தினமணி இணையம் தந்த தலைப்பு ! தீபத்தின் ஒளியில் ! கவிஞர் இரா .இரவி !



தினமணி இணையம் தந்த தலைப்பு !

தீபத்தின் ஒளியில் !       கவிஞர் இரா .இரவி !

தீபத்தின் ஒளியில் இருள் விலகும் 
தன்னம்பிக்கை ஒளி எங்கும் பரவும் !

மின்சார விளக்கின்றி தீபஒளியில் படித்து 
மேதைகள் ஆனவர்கள் பலர் உண்டு !

வறுமை வாட்டிய போதும் வருந்தாது 
விளக்கொளியில் படித்து சாதித்தோர் உண்டு !

குடிசை வீடு மின்வசதி இல்லை ஆனாலும் 
குவலயத்தில் சிறந்து விளங்கியோர் உண்டு !

தெரு விளக்கில் படித்து உலகில் 
திறம்பட வாழ்ந்து சிறந்தோர் உண்டு !

இருட்டு இருட்டு எண்டு புலம்புவது விடுத்து
எடுத்து ஒரு தீபத்தை ஏற்றுவது சிறப்பு !

தீபத்தின் ஒளியில் தெரியும் தாயின் முகம் 
தாய்ப்பாசத்தைக் காட்டிப் பிரகாசிக்கும் !

தீபத்தின் ஒளியில் தெரியும் காதலி முகம்
தரணிக்கு வந்த நிலவாக ஒளிரும் !

தீபத்தின் ஒளியில் தெரியும் குழந்தை முகம்
தவிக்கும் மனங்களுக்கு ஆறுதல் தரும் !

எடிசன் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் 
இன்றும் தீபத்தின் ஒளியே ஒளியாக இருந்திருக்கும் !

மின்தடைகள் வரும்போதெல்லாம் இன்றும் 
மாநிலத்தில் பயன்படுவது  தீபத்தின் ஒளியே !

தீபத்தின் ஒளியில் அன்றும் படித்தனர் 
தீபத்தின் ஒளியில்  இன்றும் படிக்கின்றனர் !

உலகமயத்தால் ஒன்றும் செய்ய இயலவில்லை 
ஒளிரும் தீபத்தின் ஒளியை ! என்றும் ஒளிரும் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்