ஆசை ! கவிஞர் இரா .இரவி !

ஆசை ! கவிஞர் இரா .இரவி !

பொருள் மீதான ஆசை 
திருட்டு 
கைவிலங்கு !

பொன் மீதான ஆசை
தவறான வழி
தடுக்கி விழுந்தனர் ! 

மது மீதான ஆசை
உயிர்  பறித்தது 
மனிதனை !

மாது மீதான ஆசை
சபலம் சஞ்சலம் 
உயிர்க்கொல்லி நோய் !

பணத்தின் மீதான ஆசை
வழிவகுத்தது ஊழல் 
சிறை !

புகழ் மீதான ஆசை 
விளம்பரம் 
விவகாரம் !

புழு மீதான ஆசை
சிக்க வைத்தது 
மீனை !

வடை மீதான ஆசை
மாட்ட வைத்தது 
எலியை !

ஆசையே அழிவுக்குக் காரணம் 
அன்றே உரைத்தார் 
புத்தர் !


.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்