படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

நன்றி பாக்யா வார இதழ் !

படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

தண்ணீரில் முகம் பார்க்கும் பெண்ணே !
சின்னப் புன்னகையை 
சிரிப்பாக விரிவு செய் !

தனிமையில் இனிமை காணும் பெண்ணே 
தலைவன் வந்தால் 
இன்னும் இன்பம் !

பெண்கள் இட ஒதிக்கீடு சட்டம்
நிறைவேறாத வருத்தமா உனக்கு ?  
நிறைவேறும் வேண்டாம் கவலை !

குளத்தில் நீந்தும் மீன்களை  ரசிக்கும் 
கன்னியே உன் கண்களில் தெரிவதும் 
மீன்களே !

மரங்களின் நிழலோ தண்ணீரில் 
மங்கையின் நினைவோ 
தலைவன் மீது !

கருத்துகள்