நன்றி தினமணி இணையம் . கவிஞர் இரா .இரவி ! உழைப்பே உன்னதம்: கவிஞர் இரா .இரவி

நன்றி தினமணி இணையம் . கவிஞர் இரா .இரவி !
உழைப்பே உன்னதம்: கவிஞர் இரா .இரவி

http://www.dinamani.com/kavithaimani/2016/05/09/%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-.%E0%AE%87/article3423586.ece

By dn
First Published : 09 May 2016 10:51 AM IST
உழைத்து ஊதியம் ஈட்டி அப்பணத்தில்
உண்பது உண்மையில் உன்னத இன்பம் !
அடுத்தவர் உழைப்பில் ஈட்டிய பணத்தில்
அருகே அமர்ந்து உண்பது இழுக்கு !
அப்பா தந்த சொத்தை வைத்து சோம்பேறியாக
அலுப்பின்றி உழைக்காமல் உண்பது இழுக்கு !
உருக்கினால்தான் தங்கம் நகையாக முடியும்
உழைத்தால்தான் மனிதன் மனிதனாக முடியும் !
செதுக்கினாலதான் கல் சிலையாக மாறும்
சிந்தித்து உழைத்தால்தான் சிறந்திட இயலும் !
தீக்காயம் பட்டால்தான் புல்லாங்குழல் வரும்
தன்னம்பிக்கையோடு உழைத்தால்தான் புகழ் வரும் !
பஞ்சு நூற்றால்தான் நூலக உருவாகும்
பணிந்து உழைத்தால்தான் பண்பு உருவாகும் !
மயிலுக்குத் தோகைதான் அழகினைத் தரும்
மனிதனுக்கு உழைப்புத்தான் மேன்மையைத் தரும் !
யானைக்கு தந்தம் கம்பீரம் நல்கும்
யாருக்கும் உழைப்புத்தான் பெருமை நல்கும் !
அடுத்தவர் உழைப்பில் பிரியாணி உண்பதை விட
அவரவர் உழைப்பில் கூழ் குடிப்பதே மேல் !
சும்மா இருந்தால் இரும்பு கூட துருப்பிடிக்கும்
சும்மா இருந்தால் மனிதன் சிறுதுரும்புதான் !
மூச்சு இருக்கும் வரை வேண்டும் உழைப்பு
முடிந்த பணியினைச் செய்து வாழ்வதே சிறப்பு !
உடலை நோயின்றி காப்பது உழைப்பு
உடலுக்கு நலம் நல்குவது உழைப்பு !
உழைத்தால் இரவு உறக்கம் உறுதி
உழைக்காவிடில் உறக்கம் உறுதியன்று !
மனதிற்கு மகிழ்ச்சித் தருவது உழைப்பு
மனதைச் செம்மையாக்குவது உழைப்பு !
உலகில் உழைப்பே உன்னதம் உணர்ந்திடுக
உலகம் இயங்குவதே உழைப்பால்தான் அறிந்திடுக !

--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்