பாக்யா அட்டை படத்திற்கு எழுதிய கவிதை ! கவிஞர் இரா .இரவி !

பாக்யா அட்டை படத்திற்கு  எழுதிய கவிதை !

கவிஞர் இரா .இரவி !

விடுதலை பெற்றன  விலங்குகள் 
வஞ்சிக்கும் கிட்டியது விடுதலை 
சிறையில் ஆணாதிக்கம் !

விலங்குகளைக் கூண்டிலடைத்து   
ரசித்திடும் மனிதா 
புரிந்ததா ? சிறைக்கொடுமை !

துணிந்து  வா வெளியே 
இரண்டு விலங்குமே சைவம்தான் 
உண்ணாது உன்னை !

பயத்தை விடு 
கரங்களால் கம்பியை வளை 
கிடைக்கும் வழி !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்