நன்றி . தினமணி இணையம் !

நன்றி . தினமணி இணையம் !
http://www.dinamani.com/kavithaimani/2016/03/21/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87/article3337386.ece


.

இலவசம் எனும் வசியம் ! கவிஞர் இரா .இரவி !

By dn
First Published : 21 March 2016 12:00 AM IST
இலவசம் எனும் வசியம் மருந்து  தந்து
இளிச்சவாயர் ஆக்கிவிட்டனர் மக்களை !
உழைப்பாளியை சோம்பேறியாக்கி வீட்டில்
உட்கார்ந்து உண்ண வழி வகுத்தனர்  !
மீன் தருவதைவிட மீன் பிடிக்கக் கற்றுத்தருதல்
மேன்மையானது என்று சீனப் பொன்மொழி உண்டு !
மீன் வழங்கி இங்கே பழக்கப் படுத்தியதால் 
மீன் பிடிக்கத் தெரிந்தவர்களும் மறந்து விட்டனர் !
வாழ்வாதாரம் வழங்கி விட்டால் நீங்கள்
வழங்க வேண்டியதில்லை இலவசம் !
உழைப்பும்  ஊதியமும் உறுதியாகி விட்டால்
ஒருவரும் விரும்ப மாட்டார்கள்  இலவசம் !
மீனைப்   பிடிக்க வைக்கும் தூண்டில் புழுவென 
மக்களிடம் வாக்கு வாங்க வைக்கும் புழு இலவசம் !
ஆண்டவர் ஆள்பவர் போட்டிப் போட்டு இலவசங்களை
அள்ளி வழங்கி அடிமையாக்கினர் மக்களை !
ஆண்ட பரம்பரையில் வந்த தமிழக மக்களை
அடிமையாக்கி இலவசத்திற்குக் கையேந்த வைத்தனர் !
தனியாரிடமிருந்த மதுக்கடைகளை அரசுடமையாக்கி
தடுக்கி விழும் இடமெல்லாம் மதுக்கடைகள் திறந்தனர் !
அரசிடமிருந்த கல்வித் துறையை தனியாருக்குத் தந்து
அவர்கள் கொள்ளை அடித்தனர் அல்லல்படும் மக்கள் !
குடிமக்களை குடி மக்களாக்கி கோடிகள் திரட்டினர்
கொஞ்சம் இலவசத்திற்கு கிள்ளி வழங்கினர் !
அமைதி இழக்கச் செய்யும் மதுவும் வேண்டாம்
ஆள்வோர் தரும் பிச்சை இலவசமும் வேண்டாம் !
வசிய மருந்துக்கு மயங்கியது போதும்
வாழ்க்கையை தன் மானத்துடன் வாழ்வோம் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்