5 வது முறையாக தேசிய விருது பெறும் மண்ணின் மைந்தன் மேஸ்ட்ரோ ,சிம்பொனி இளையராஜா அவர்களுக்கு பாராட்டுக்கள் . கவிஞர் இரா .இரவி !

5 வது முறையாக தேசிய விருது பெறும் மண்ணின் மைந்தன் மேஸ்ட்ரோ ,சிம்பொனி இளையராஜா அவர்களுக்கு பாராட்டுக்கள் . கவிஞர் இரா .இரவி !


சிம்பொனி ,மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்களை ப் பற்றி 1997 ஆம் ஆண்டிலேயே நான் எழுதிய கவிதை !

மேஸ்ட்ரோ இளையராஜா வாழ்க பல்லாண்டு !
கவிஞர் இரா .இரவி !
இசைஞானியே ! இசையின் தோணியே !
இளையராஜாவே ! இன்னிசை ரோஜாவே !
அன்னக்கிளியில் ஆரம்பமானது இசைப் பயணம் !
ஆங்கில நாட்டில் சிம்பொனியாய் மிளிர்ந்தது !
கிராமியப் பாடல்களுக்கு வாழ்வளித்த வல்லவரே !
கிராமத்தில் பிறந்து உயர்ந்த நல்லவரே !
பட்டி தொட்டி எல்லாம் கிராமியப் பாடல்கள் !
பாமரரை எல்லாம் ஈர்த்திடும் பாடல்கள் !
மேட்டுக் குடியினருக்கே சொந்தமென்ற இசையை !
மண் குடிசைக்கும் சொந்தமாக்கி மகிழ்வித்தாய் !
புரியாத இந்தி இசையை தமிழ்நாடு விட்டு விரட்டினாய் !
புரிந்த தமிழ்ப் பாடலால் சரித்திரம் படைத்தாய் !
தங்கத் தமிழில் ஒலித்திட்டாயே பாடல்கள் யாவும் !
தரணியே போற்றித் தகும் வண்ணம் செய்தாய் !
நடிகருக்காக ஓடிய படங்களின் தன்மையை !
நயம் தரும் இசைக்காக ஓட வைத்தாய் !
புலிக்குப் பிறந்தது பூனையாகாது உண்மை !
உந்தன் வாரிசுகள் நிருபித்தனர் நன்மை !
தமிழக மக்களை மட்டுமன்றி உலகத் தமிழர்களை
தரமான பாடல்களால் உள்ளம் கொள்ளைக் கொண்டாய் !
உலகம் உள்ளவரை தமிழ் மொழி இருக்கும் !
தமிழ் மொழி உள்ளவரை உன் பாடல் நிலைக்கும் !
2015 ஆம் ஆண்டு எழுதிய கவிதை !
இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா மட்டுமே !
கவிஞர் இரா. இரவி !
*****
பண்ணைப்புரத்தில் பிறந்த இசைப்பண்ணையே!
பழைய மதுரை மாவட்டமான தேனியில் உதித்தவரே!
மேட்டுக்குடி இசையை மாடு மேய்ப்பவருக்கும் தந்தவரே!
மென்மையான இசையை மேன்மையாக வழங்கியவரே!
நாட்டுப்புற இசையை நாடு வியக்க இசைத்தவரே!
நாடுகள் தாண்டிச் சென்று சிம்பொனி மீட்டியவரே!
விருதுகள் பல பெற்று விருதுகளுக்கு பெருமை ஈந்தவரே!
விவேகமான பாடல்களை வெள்ளித்திரையில் யாத்தவரே!
கடவுளுக்கு மேலாகத் தாயை வணங்குபவரே!
கடவுள்கள் பலருக்கு கும்பாபிசேகம் செய்தவரே!
ராசய்யா என்ற இயற்பெயரை இளையராசா என மாற்றியவரே!
ராசாவாக இசையில் என்றும் வலம் வருபவரே!
பாவலர் வரதராசனின் பண்பான இளவலாக வளர்ந்தவரே!
பாவலரோடு பல கச்சேரிகள் செய்து இசை கற்றவரே!
உன்பாடல் ஒலிக்காத தொலைக்காட்சி இங்கு இல்லை!
உன்பாடல் ஒலிக்காத தொலைக்காட்சி தொலைக்காட்சியே இல்லை!
இசையால் இதயங்களை இதமாக்கிய இசைவேந்தரே!
இசையால் வசமாக்கி எல்லோரின் உள்ளம் கவர்ந்தவரே!
ஆறு முதல் அறுபது வரை அனைவரையும் ரசிக்க வைத்தவரே!
ஆறு இசை ஆறு தமிழகத்தில் ஓடிடச் செய்தவரே!
இசையில் பொற்காலம் உன் காலம் என்றாக்கியவரே!
இசை ஓசையில் ஒழுங்கு ஒழுங்கை ஒழுங்கு செய்தவரே!
அன்னக்கிளியில் தொடங்கி ஆயிரம் படங்களுக்கு மேல் இசைத்தவரே!
அன்னப்பறவையென தண்ணீர் விலக்கி இசைப் பால் நல்கியவரே!
மிகச்சிறந்த படங்களுக்கு விருது கிடைத்திட காரணமானவரே!
மோசமான படங்களையும் இசையால் ஓடிட வைத்தவரே!
கர்னாடக இசை, மேற்கத்திய இசை எந்த இசையிலும்
கற்கண்டு பாடல்களை இசை அமைத்தவரே !
ஏழைகளின் கவலைப் போக்கும் பாடல் தந்தவரே !
ஏழைகளின் இன்னலை பாட்டில் வடித்துத் தந்தவரே !
குடத்து விளக்காக இருந்த கவிஞர்கள் பலரை
குன்றத்து விளக்காக ஒளிர வைத்தவரே!
பாடகர்கள் பலரை உச்சம் தொட வைத்தவரே !
பாடகிகள் பலரை புகழ் அடைய வைத்தவரே !
கவிதை கட்டுரை எழுதும் ஆற்றல் மிக்கவரே !
கிராமத்தில் பிறந்து லண்டன் வரை புகழ் சேர்த்தவரே !
பண்ணால் பண்ணைப்புரத்திற்கு புகழ் சேர்த்தவரே !
பல மொழிகளில் இசையமைத்து புகழ் பெற்றவரே !
இசை வரலாற்றில் நிலைத்த இடம் பெற்றவரே!
என்றும் காலம் கடந்தும் நிலைக்கும் உந்தன் இசை!
சாதனைகள் பல புரிந்த போதும் தலையில் ஏற்றாதவரே!
சோதனைகள் வந்த போதும் துவளாத உள்ளம் பெற்றவரே!
எழுபத்தி இரண்டாம் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் !
இன்னும் புதிய புதிய இசை எதிர் நோக்குகின்றோம் !
எழு ராகத்திலும் இன்னிசையில் இசையாட்சி புரிபவரே !
இனிதே பல்லாண்டு வாழ்க நூற்றாண்டுகள் கடந்து !
.
இளையராஜா இசையில் மூத்த பெரிய ராஜா !
இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா மட்டுமே !


கருத்துகள்