- நன்றி .தினமணி இணையம் என் தேசம் என் சுவாசம்: கவிஞர் இரா .இரவி !

http://www.dinamani.com/kavithaimani/2016/02/01/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-/article3255938.ece

-- நன்றி .தினமணி இணையம்

என் தேசம் என் சுவாசம்: கவிஞர் இரா .இரவி !

By dn
First Published : 01 February 2016 11:48 AM IST
உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது
உணவிலிருந்து உடை வரை அந்நியமானது
 
இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று
எல்லா   நாட்டுக்காரனும் ஆள்கின்றனர்  இன்று
வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று
வியாபாரம்என்று வந்து ஆள்கின்றனர்  இன்று

விதை நெல்கள் காணமல் போனது
விதைகள் அயல்நாட்டான் முடிவானது
இயற்கை விவசாயம் அழிந்து விட்டது
செயற்கை உரங்கள் பெருகி விட்டது

பூச்சி மருந்துகள் மனிதனையும் கொல்கின்றது 
பூச்சிகள்  பல புதிது புதிதாக உருவானது
உலகமயம் என்ற பெயரில் வந்தனர்
உலை வைத்தனர் உள்ளூர் தொழில்களுக்கு

தாராளமயம் என்ற பெயரில் வந்தனர்
தாராளக் கொள்ளை அடிக்கின்றனர்
புதிய பொருளாதாரம் என்ற பெயரில்
புதுப்புது கொள்ளை அடிக்கின்றனர்

ஆயுத வியாபாரம் செய்து நம்மிடமிருந்து  
அள்ளிச் செல்கிறான் கோடிகளை சிலர்
அணு உலைகளை தலையில் கட்டி
ஆபத்தில் ஆழ்த்தி கோடிகள் பெறுகிறான்

திறந்த வீட்டில் நாய்கள் நுழைந்த கதையாய்
தேசத்தின் உள்ளே பன்னாட்டுக் கொள்ளையர்கள்
என் தேசம் !என் சுவாசம் ! என்று உணர்வோம்
இனியாவது விழிப்போம் கொள்ளையரை  விரட்டிடுவோம்

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்