இன்று புதிதாய் பிறந்தோம் ! கவிஞர் இரா .இரவி !




இன்று புதிதாய் பிறந்தோம் ! கவிஞர் இரா .இரவி !

இன்று புதிதாய் பிறந்தோம் நாம் !
இனி நடப்பவை நல்லவையாகட்டும் !

பழைய கவலைகளை மறந்திடுவோம் !
பழைய  வலிகளை  மறந்திடுவோம் !

வேற்றுமைகளை விடுத்து இணைவோம் !
வேதனைகளை மறந்து மகிழ்ந்திடுவோம் !

பிறந்த குழந்தை சூதுவாது அறியாது !
பிறந்த குழந்தையின் மனம் பெற்றிடுவோம் !

குழந்தைக்கு சாதிமத பேதம்  தெரியாது !
குழந்தையின் குணத்தைப் பெற்றிடுவோம் !

பொய் பேசத் தெரியாது குழந்தைக்கு !
பொய் பேசாமல் மெய்யே பேசிடுவோம் !

குழந்தை கூடஇருந்து குழி பறிக்காது !
கூடஇருந்து குழி பறிக்காது இருப்போம் !

நீரை விடுத்து பாலை அருந்தும் அன்னம் !
நல்லவை ஏற்று அல்லவை நீக்கிடுவோம் !

காந்தியடிகளின் போதனைக் குரங்குகள் என
கண் காது வாயை தீங்கிற்கு பயன்படுத்தாதிருப்போம் !

பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்திடுவோம் !
பிறப்பை அர்த்தம் உள்ளதாக்கிடுவோம் !

மனிதநேயத்தை மனதினில் ஏற்றிடுவோம் !
மதவெறியை மனதினில் அகற்றிடுவோம் !

எண்ணங்கள் யாவும்  இனிதாகட்டும் !
எண்ணிய யாவும் இனி வசமாகட்டும் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



கருத்துகள்

கருத்துரையிடுக