படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

முயற்சி திருவினையாக்கும்
வள்ளுவன் வாக்கை
மெய்ப்பித்த ஆடு !

பசி பயம் அறியாது
பயந்தால் பசியாற முடியாது
உணர்ந்த ஆடு !


பசியால்
பயமும் பறந்தது
பசியாறும்  ஆடு !

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
வாகனமும் ஆயுதமானது
ஆட்டுக்கு !

கசையடி தரலாமா ?
பசியோடு தவிக்கவிட்ட
ஆட்டின் உரிமையாளனுக்கு !

கொடிது கொடிது
பசி கொடிது
எந்த உயிருக்கும்  !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்