கோபுரம் ! கவிஞர் இரா .இரவி !

கோபுரம் !  கவிஞர் இரா .இரவி !


காற்றின் தயவால்
காகிதம் சென்றது
கோபுரம் !

மாடப்புறாக்களின்
இலவச தங்குமிடம்   
கோபுரம் !

குனிந்த தலை நிமிராத பெண்ணையும்
நிமிர  வைக்கும்
கோபுரம் !


வாழ்கின்றது
கலசங்களால்
கோபுரம் !

வானைத் தொடும்
ஆனால் தொடாது
கோபுரம் !

கர்வம் கொள்வதில்லை
உயரமாக இருந்தாலும்
கோபுரம் !



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


கருத்துகள்