மனிதநேயம் ஒன்றுதான் மனிதனுக்கு அழகு ! கவிஞர் இரா .இரவி !

மனிதநேயம் ஒன்றுதான் மனிதனுக்கு அழகு !   கவிஞர் இரா .இரவி !

சாதியின் பெயரால் மோதுவது முறையோ ? 
சகோதர வால்வவைச் சிதைப்பது தகுமோ ?

உயர்ந்தவன் தாழ்ந்தவன் சாதியில்  இல்லை !
உயர்ந்தவன் தாழ்ந்தவன் சிந்தையில் உண்டு !

உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் ஓரினம் !
என்று அன்றே உலகிற்கு  உரைத்தவன் தமிழன் !

ஒரே ஊருக்குள் சாதிச் சண்டை நடந்தால் !
உலகம் சிரிக்கும் நம்மைப் பார்த்து !

வெட்டுவதும் குத்துவதும் விவேகம் அன்று !
வீணாக சண்டையிடுவது பகுத்தறிவு அன்று !

விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இனிக்கும் !
வீரமென்று மோதி வீழ்ந்தால் கசக்கும் !

சொந்தமாக சிந்தித்தால் சண்டை வராது !
சிலர் தூண்டி விட மோதுவது முட்டாள்தனம் !

உயர்திணை மனிதன் அக்றிணையாகலாமா !
ஒரு போதும் மனிதன் விலங்ககாகக்  கூடாது !

விலங்குகள் கூட தன இனத்தை அழிப்பதில்லை !
மனிதன்தான் தன் இனத்தை அழிக்கின்றான் !

மனிதநேயம் ஒன்றுதான் மனிதனுக்கு அழகு !
மனிதன் மனிதனாக வாழ்வதே நன்று !

-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்