படம் சொல்லும் பாடம் ! கவிஞர் இரா .இரவி !


படம் சொல்லும் பாடம் ! கவிஞர் இரா .இரவி !

சங்க இலக்கியத்தில் 
கொஞ்சம் தண்ணீரை 
ஆண் மான் குடிக்கட்டும் 
என்று பெண் மானும் 
பெண் மான்  குடிக்கட்டும் 
என்று ஆண் மானும்
குடிப்பது போல் நடித்தன 
கொஞ்சமும் தண்ணீர் 
குறையவே இல்லை .

இங்கு 
புல்லைக் கூட  ஆண் மான் 
உண்ணட்டும் என்றும் 
பெண் மான் விட்டுக் 
கொடுக்கின்றது .
இணையை பிறந்த காகம் 
ஏக்கத்தோடு பார்க்கின்றது . 
விட்டுக் கொடுத்தலில் 
வீற்றிருக்குது அன்பு !

கருத்துகள்