சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நூல் வெளியீட்டு விழா

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில்  நூல் வெளியீட்டு விழா

கலைமாமணி  ,முனைவர் ,நகைச்சுவை வேந்தர் இளசை சுந்தரம் அவர்கள் எழுதிய நீங்களும் சொற்பொழிவாளர்   ஆகலாம் என்ற நூலை மதுரை மாநகரத்தின் தந்தை ராசன் செல்லப்பா வெளியிட, டால்பின் மெட்ரிக் மேனிலைப் பள்ளி தாளாளர் இராமநாதன் பெற்றுக் கொண்டார் .பாரதி தேசியப் பேரவையின் தலைவர் ஜான் மோசசு தலைமை வகித்தார் .புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் 
பி .வரதராசன் முன்னிலை வகித்தார் .கவிஞர் இரா .இரவி நூல் பற்றிய விளக்கவுரை தந்தார் .கலைமாமணி  ,முனைவர் ,நகைச் சுவை வேந்தர் இளசை சுந்தரம் அவர்கள் ஏற்புரையாற்றினார். இராதா ருஷ்ணன் நன்றி  கூறினார் .இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டால்பின் மெட்ரிக் மேனிலைப் பள்ளி தாளாளர் இராமநாதன் அவர்கள்  வெளியிடப் பட்ட நூல்கள் 30 விலைக்கு  வாங்கி மதுரையில் உள்ள மாநகராட்சி பள்ளி நூலகங்கள் வழங்கினார் .

புகைப்படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் செந்தில் கை வண்ணத்தில் .



கருத்துகள்