2.9.2014.இன்று ரோட்டரி ( சுழற்ச்சங்கம் ) விழாவில் கவிஞர் இரா .இரவி

2.9.2014. இன்று ரோட்டரி ( சுழற்ச்சங்கம் )  விழாவில் கவிஞர் இரா .இரவி!      

இன்று ரோட்டரி விழாவில் கலந்து கொண்டு பேசி வந்தேன். சமுதாயத்திற்கு பயனுள்ள பல செய்திகள் பகிர்ந்து மகிழ்ச்சி நம் கையில் என்பதை உணர்த்தி வந்தேன் .

ரோட்டரி சங்கத்தின் சார்பில் பல் நல்ல பணிகள் செய்து வருகிறார்கள். பொறுப்பாளர்களை பாராட்டினேன் .இந்தியாவில் போலியோ இல்லாமல்  முற்றாக ஒழித்ததில் ரோட்டரி சங்கத்தின் பங்கு பாராட்டுக்குரியது .தற்போது அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள் .

வாரத்தில் ஒரு நாள் ஒன்று கூடி விவாதித்து பல நல்ல பணிகள் செய்து வருகிறார்கள் .  தன் வீடு   தன் குடும்பம்  என்று சுருங்கி விடாமல் பொது நல சேவை செய்து வருகின்றனர் . 

ரோட்டரி சங்கத்தின் உதவி ஆளுநர் திரு .முஸ்தபா ,தலைவர் திரு. வில்லவன் கோதை ,செயலர் திரு பழனிதாஸ் .திரு .ராம மூர்த்தி  , திரு .சண்முகப் பாண்டியன் .பாரத மாநில வங்கி திகாரி ( ஒய்வு ) 
திரு .பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

.

கருத்துகள்