கவனம் கொடூரன் ! கவிஞர் இரா .இரவி !

கவனம்  கொடூரன் !         கவிஞர் இரா .இரவி !

செருப்பாலடித்து விட்டு 
கருப்பட்டி தந்தானாம் 
மீனவர்  விடுதலை !

லட்சகணக்கில் கொன்று விட்டு 
சிறு எண்ணிக்கை விடுதலை 
இலங்கை !
.
அப்பாவிகளை கைது செய்து 
அரங்கேற்றினான் 
விடுதலை நாடகம் !

அதையும் பாராட்டும் 
அப்பாவி கூட்டம் 
மீனவர் !

யோக்கியன் வருகிறான் 
சொம்பை தூக்கி வை உள்ளே 
அவன் வருகை ! 

மறக்க முடியாதவன் 
மன்னிக்கக்  கூடாதவன் 
கொடூரன் !

இரக்கமற்ற அரக்கன் 
இனம் அழித்த வேடன் 
அவன் !

ஜாலியன் வாலபாக் மிஞ்சும் 
கொடுரம் நிகழ்த்தியவன் 
அவன் !

கொடுமையில் 
கிட்லரை வென்றவன் 
அவன் !

சுதந்திரம் கேட்டவர்களை 
சுட்டு வீழ்த்தியவன் 
அவன் !

விடுதலை கேட்டவர்களின் 
வேரை அறுத்தவன் 
அவன் !

ஜனநாயகத்தையும் மக்களையும் 
குழி தோண்டி புதைத்தவன் 
அவன் !

நெஞ்சம் பொறுக்கவில்லை 
வஞ்சகனை நினைத்தால் 
மோசக்காரன் !

வானூர்தி வழி குண்டுகள் வீசி 
மக்கள்  உயிரைப்  பறித்தவன் 
அவன் !

புலிகள் என்று சொல்லி 
பூனைகளையும் கொன்றவன் 
அவன் !

முப்படை தாக்குதல் 
சொந்த மக்கள் மீதே நடத்தியவன் 
அவன் !

சர்வாதிகாரத்தின் உச்சம் 
தமிழனம் இல்லை மிச்சம் 
முடித்தவன் அவன் !

ரோசம் மானம் 
துளியும் இல்லாதவன் 
அவன் !

நடிக்கிறான் நம்பாதீர் 
நம்பிக்கை துரோகி 
அவன் !

சிரித்தே கழுத்தறுக்கும் 
நயவஞ்சகன் 
அவன் !

கொலைகாரனுக்கு வரவேற்பு
கொள்கையாளருக்கு சிறை 
மிக நன்று !  

சிங்களன் உறவு 
தமிழர் பகை 
வாழ்க தேசியம் !

கருத்துகள்