ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
முன்னறிவிப்பு செய்தன
மழையின் வருகையை
இடி மின்னல் !
விழிகள் பேசும்போது
மௌனமாகின்றன
இதழ்கள் !
கவிதைக்கு மட்டுமல்ல
காதலிக்கும் இனிமை
முரண் !
வீண் வேலை
மரங்களை வீழ்த்திவிட்டு
மழைக்கான பிராத்தனை !
செயற்கைச் செடிக்கும்
தண்ணீர் ஊற்றினர்
அழுக்கு நீக்க !
அறம் என்றால்
என்ன என்றார்
அரசியல்வாதி !
கருத்துகள்
கருத்துரையிடுக