படித்ததில் பிடித்தது ! .நூல்வகை:மொழிபெயர்ப்பு நூல் மொழிபெயர்ப்பு ஆசிரியர்:டாக்டர்.எம்.இராஜாராம் I.A.S. நூல்:THIRUKKURAL(Pearls of inspiration) மதிப்புரை:முனைவர் ச.சந்திரா

படித்ததில் பிடித்தது !


.நூல்வகை:மொழிபெயர்ப்பு நூல்

மொழிபெயர்ப்பு ஆசிரியர்:டாக்டர்.எம்.இராஜாராம் I.A.S.

நூல்:THIRUKKURAL(Pearls of inspiration)

மதிப்புரை:முனைவர் .சந்திரா

தோரண வாயில்:
       தெள்ளுதமிழ்ப்பேசும் தென்பாண்டித்திருநாட்டின் நான்மாடக்கூடலில் அங்கயற்கண்ணியுடன் ீற்றிருக்கும் ஆலவாயான்அருளிய ங்கப்பலகையில், அரங்கேறிய அற நூலே திருக்குறள்.பாலெல்லாம் நல் ஆவின் பாலாமோ?பாரிலுள்ள நூலெல்லாம்வள்ளுவர்செய் நூலாமோ?என்று வியக்கும்படி உருவானதே 'உத்திரவேதம்'எனப்புகழப்படும் உலகின் உயிர்நூலாம்திருக்குறள்.கலம் ஏறி கடல் கடந்து வந்து திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தார் வீரமாமுனிவர் அன்று!கல்வித்துறையில்இருந்து கொண்டு,கற்கண்டினும் இனிமையாக திருக்குறளை,அகிலத்தையே ஆளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் டாக்டர்எம்.இராஜாராம் இன்று!தேனி கூடு கட்டுவதும்,சிலந்தி வலை பின்னுவதும் அரியகலை என்பார் அரும்பெரும் மூதாட்டியாம்ஔவையார்.மொழிபெயர்ப்பும் ஓர் அரிதான,அதே வேளையில் அழகான கலையே என்பதனை முனைவர் .இராஜாராமின்THIRUKKURAL(Pearls of inspiration) நூல் நிரூபணம் செய்கின்றது.பட்டை தீட்டப்பட்ட வைரமாய் ஜொலிக்கின்றது..ஜெ.அப்துல்கலாம் இந்நூலுக்குத் தந்திருக்கும் அணிந்துரை.
அலைகடல் தாண்டி...
தண்டமிழின் பெருமையை தரணி முழுவதும் கொண்டு சேர்த்ததில் பெரும்பங்கு அகரத்தில் துவங்கி னகரத்தில் நிறைவுறும்திருக்குறள் நூலுக்கு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை. No language combines greater force with equal brevity than Tamil--எனும்Rev.Percival-  கூற்றும், Tamil is most highly cultivated language-- என்ற அறிஞர் Maxmuller-இன் வாசகமும் திருக்குறள் நூலுக்கு சாலவேபொருந்தும்..இத்தகை தமிழின் சீர்மையை அலைகடல் தாண்டி கொண்டு செல்ல வேண்டும் என் நல்லெண்ணத்துடன் இந்நூலைஉருவாக்கிய ஆசிரியருக்கு முதலில் நன்றி.
கயிற்றின் மேல் கழைக்கூத்தாடி:
         படைக்கப்பட்ட கவிதை இலக்கியத்தின் மொழி,அந்த இலக்கியம் மொழிபெயர்க்கப்பட வேண்டிய ொழி-என இவ்விருமொழிகளுக்குரிய லக்கண விதிகள்,மரபுத்தொடர்கள்,ழுத்து மரபு -இவை அனைத்திலும் ுழுமையான தெளிவு பெற்றிருந்தால்மட்டுமே மொழிபெயர்ப்புத்துறையில் இறங்க இயலும்.மேற்கூறியத் திறம் டாக்டர் இராஜாராம் அவர்களுக்கு உள்ளதுஎன்பதைஇம்மொழிபெயர்ப்புநூல்நிரூபிக்கின்றது.இடைச்சொற்கள்(Conjunction) இழையோட,உரிச்சொற்களோ(Attributive)உறவாட,இனிமை (Rhythm) நதியோட்டமாய்,மொழிநடை ஒயிலாட்டமாய்,பண்புநலன்களோ (Abstract Noun)குவியல்களாய்,வியப்பிடைச்சொல்லும் (Interjection),வினாச்சொல்லுமாய்(Interrogation)குறிப்பும், (Symbolic)வியங்கோளுமாய்(operativeverb)சந்தநயம்,சொல்நயம்,பொருள்நயம்-என மொத்தத்தில் ஓர் இலக்கணப்புதையலாய் இந்நூல் உள்ளது. உலகின் எந்தக்கோடியில் வசிப்பவர் வாசித்தாலும் ,கருமேகம் உடனுக்குடன் மழையைப் பொழிவதுபோல் அவரவர் தாய்மொழிக்கு தானாகவே மொழிமாற்றம் செய்துவிடும் வல்லமையை இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்தந்துவிடும் என்பது உறுதி. பெயர்ச்சொல் உருபு ஏற்கும்முறை (Declensions)வினைச்சொல்உருபுஏற்கும்முறை(Conjunction) இவையெல்லாம் மொழிக்கு மொழி மாறுபடினும்,எவ்விதசொற்சிதைவும்,பொருட்சிதைவுமில்லாது எவ்வெச்சொற்களோடு எதனெதனை எங்கெங்கே எவ்வெவ்வாறு  இணைக்க வேண்டும்என்பதில் கயிற்றின் மேல் நடனம் ஆடும் கழைக்கூத்தாடி போல் கவனத்தோடு  மொழிபெயர்ப்பைச் செய்துள்ளார் டாக்டர் இராஜாராம்
அழுத்தமும் திருத்தமுமாய்..
        பெருமை  பெருமிதம் இன்மை சிறுமை
         
பெருமிதம் ஊர்ந்து விடல்.(குறள்.979)எனும் குறள்
                       Greatness is free from vanity
                                    Pettings rides on vanity.
 என, சொல்லும் பொருளும் பிறழாமல் மொழிபெயர்க்கப்பட்ட ஒன்று.
What is stronger than destiny?
 என வினவிபின்  It is a power that prevails over human endeavour(kural.380)- என்று விடையளிப்பதன் வழிதிருவள்ளுவர் கூறிய ஊழின் வலிமை ஆங்கிலத்தில் ழுத்தமாய் ஆசிரியரால் சொல்லப்படுகிறது.
              
முதல் இல்லார்க்கு  ஊதியம் இல்லை மதலையால்
             
சார்பு இல்லார்க்கு இல்லை நிலை.(குறள்.449)
ன்ற குறளை,
            Without capital  there  is no profit
          And no stability without support.
என ‘நச்’ என்று நூலை வாசிப்போர் மனதில் பதியுமாறு ஆசிரியர் மொழிபெயர்த்திருப்பது வியக்கத்தக்கது.கற்பூரஜோதி:             சொல்லுக சொல்லைப்  பிறிதோர்சொல் அச்சொல்லை
             
வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து(குறள்.645)என்ற இந்த குறளானது ,
                 Select and speak only such words
             Not excelled by other words.
என மொழிபெயர்க்கப்பட ,கற்பூரம் எவ்விதம் அக்னியை உடன் பற்றிக்கொள்கின்றதோ அதைப்போல மொழிபெயர்ப்பின் எளிமைநம் மனதில் பற்றிக்கொள்வதோடு அதனை வாழ்வில் பின்பற்றவும் தூண்டுகின்றது.
புரியாத புதிரும் புரியும்:
             
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
               
புண்கண் உடைத்தற் புணர்வு.(குறள்.1152)என்ற குறளுக்கு நாம் அகராதியும் ,தெளிவுரையும் பார்த்தால் கூட புரிவது கடினம்.ஆனால் மொழிபெயர்ப்பு ஆசிரியரோ,
                  The very sight of the lover was once delightful
               Fear of departure now makes ever the union fearful.
என எழிலுற மொழிபெயர்த்திருக்கின்றார்.பாலுக்குள் நெய்யா?உள்ளங்கை நெல்லிக்கனியா?                   இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
                   
கெடுக உலகுஇயற்றி யான்.(குறள்.1062)என்ற குறளுக்கு
                    If the creator of the world intends begging as human fate, He
                 himself should wander and perish.
 என தெளிவுரைத்ததோடு மட்டுமல்லாமல் திருவள்ளுவர் உரைத்த அங்கதச் சுவை (Sarcasm)  மாறாமல் ழகுபடச்சொல்லி if – conditional clause- இல் புரியாதவர்க்கும் புரிய வைத்துவிடுகின்றார் டாக்டர் இராஜாராம்.
    .
     உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
     செறாஅ அய் வாழிய நெஞ்சு.(ுறள்.1200)  தமிழில் வாசிக்கும் பொழுது தோன்றாத நாடகநயம் ஆங்கிலத்திலோ-
            O heart! Why tell the heartless your pains?
          Rather fill the Sea of sorrow with tears
.என மிளிர்கின்றது.-
            Delight at thought and cheer at sight
             Are peculiar not to liquor but to lust.
   ன்ற ஆங்கிலத்தில் அமைந்த குறளை வாசித்தவுடனேயே
             
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
             
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு.(குறள்.1281)என சூரியனைக் கண்ட தாமரையைப்போல நம் மனமானது நம்மையறியாமலேயே டனே மொழிபெயர்த்துவிடுவதில்ஆசிரியரின்மொழிபெயர்ப்புத் திறம் ுலப்படுகின்றது.
மனதார...
பகலவனின் ஒளியைப் பெற்று பால்மதி பிரதிபலிப்பதைப்போல தமிழ்மொழியின் சீர்மையையும்,செம்மையையும் டாக்டர்.இராஜாராம் ...அவர்கள்  திருக்குறள் நூல் வழி உள்வாங்கி. ஐம்பத்துமூன்று நாடுகளின் அலுவலகமொழியாய் இருக்கும்  ொழி என்ற சிறப்பினைப் பெற்ற ங்கிலத்தில் மொழிபெயர்த்த இப்புத்தகம்  உலகம் போற்றும்பன்னாட்டுச் சுற்றுலாத் தளங்கள்தோறும்காட்சிக்கும் ,விற்பனைக்குமாக ைக்கவேண்டிய அற்புதமான படைப்பு. அறுசுவைஉணவை வழங்கிப் பின் அவ்விருந்தை தாம்பூலத்துடன் நிறைவு செய்வதுபோல்,ஒவ்வொரு குறளையும் மொழிபெயர்த்ததோடுமட்டுமல்லாது,அதற்கான தெளிவுரையும் தந்து மொழிவிருந்து படைத்திருக்கும் டாக்டர் இராஜாராம் அவர்களின்தமிழ் ப் பணிதொடரட்டும்! “When rare and ripe opportunity arrives venture at once into the rare deeds”(kural.489)- எனும் உதடு ஒட்டாமல் உச்சரிக்கக் கூடிய உன்னதக் குறளுக்கு தானே இலக்கணமாகத் திகழும் டாக்டர்.இராஜாராம் ...அவர்க ளின் பெயரும் புகழும்திருவள்ளுவ ரது பொய்யாமொழியின் புகழைப்போல நெடிதாகட்டும்!-என- என்போன்ற இலக்கிய வாசகர்கள் மனமாரவாழ்த்தக் கடமைப் பட்டிருக்கின்றோம்.



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !









கருத்துகள்