மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்பயிலரங்கம்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்பயிலரங்கம்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைப்பெற்றது. தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர்எ .எஸ்.ராஜராஜன் வரவேற்றார் .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார். 
ஒருங்கினைப்பாளார் 
திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .
திருவாளர்கள்   C.ராஜேந்திரன் ,  ,ஆ . முத்து  கிருஷ்ணன் ,மருத்துவர் மீனாட்சி சுந்தரம் 
வாழ்த்துரை .வழங்கினார்கள்கவிஞர் இரா .கல்யாண சுந்தரம், கவிஞர் கே .விஸ்வநாதன் 
 தன்னம்பிக்கை தொடர்பான கவிதைவாசித்தார் . 25 வது வருட திருமண நாள் கண்ட  திரு தினேஷ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்ப பட்டது 


 பட்டிமன்ற பேச்சாளர் நவ்சாத்  முயன்றால் முடியும் என்ற 
தலைப்பில் 
தன் முன்னேற்றப்    பயிற்சி அளித்தார். தோற்பவர்கள்  இரண்டே வகைதான் .ஒன்று சிந்திக்காமல் செயல்படுபவர்கள் .மற்றொன்று சிந்தித்து விட்டு செயல்படாதவர்கள்.சிந்திக்கவும் வேண்டும் . சிந்தித்தை செயல்படுத்தவும் வேண்டும் .திருத்தப்பட்ட தோல்வி வெற்றியாகும் .  திருவள்ளுவர் ,பாரதியார் ,கண்ணா தாசன் கவிதை வரிகள் பல சொல்லி , வெற்றி மனிதர்கள் வரலாறு சொல்லி  பல்வேறு பயனுள்ள தகவல்கள் தந்து பயிற்சி அளித்தார் . 

திரு தினேஷ் நன்றி கூறினார் .கார்த்திகேயன் மற்றும் சிபி கல்லூரி பணியாளர்கள் உள்ளிட்ட  மதுரை தன்னம்பிக்கைவாசகர் வட்டத்தினர்  கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .
    
.

கருத்துகள்