காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !



காதல் கவிதைகள் !  கவிஞர் இரா .இரவி !

காதல் !
மூன்றெழுத்து உணர்வு 
மூச்சு உள்ளவரை நினைவிருக்கும் !
கர்வம் கொள்ள வைக்கும் !
கனவுகளை வளர்க்கும் !
உடல் இங்கும் எண்ணம்  அங்கும் !
அடிக்கடி அலைபாயும் !
அழகு கொஞ்சம் கூடும் !
அறிவு கொஞ்சம் குறையும் !
---------------------------------------------
விழிகளில் நுழைந்து 
மூளையில் அவள் 
சிம்மாசனம் இட்டு  
அமர்ந்து விடுகிறாள் !
காதல் ரசவாதம் 
தொடர்கின்றது !
கற்பனைக் காவியம் 
வளர்கின்றது !
----------------------------------------------------
முன்பு தேநீரை சூடாகக் 
குடிக்காதவன் !
அவள் இருக்குமிடம் 
இதயமல்ல மூளை 
என்று தெரிந்ததும் 
இப்போது தேநீரை 
சூடாகவே குடிக்கிறேன் ! 
-----------------------------------------------
காதலர்களின் கண்கள் 
கொடுக்கல் வாங்கல் நடத்துகின்றன !
யார் அதிகம் கொடுத்தது 
யார் அதிகம் பெற்றது 
கண்டுபிடிப்பது கடினம் !
-----------------------------------------------
அவள்  பேசும் சொற்களை 
காதுகள்  கேட்பதை விட  
அவள்  பேச்சால் 
அசையும் உதடுகளை 
கண்கள் இமைக்காமல் 
கண்காணிப்பதால் 
என்ன சொன்னாள்
என்பது புரியாமலே 
தலை ஆட்டி விடுகிறேன் . 
-------------------------------------------------
காதலை அவள் உதட்டால் 
உச்சரிக்காவிட்டாலும் 
கண்களால் உச்சரிப்பதை 
கண்கள் உணர்ந்து விடுகின்றன !
-----------------------------------------------
மறந்து விட்டேன் அவளை என்று 
உதடுகள் உச்சரித்தாலும் 
மூளையின் ஒரு மூலையில் 
அவள் நிரந்தரமாக ! 
----------------------------------------------

கருத்துகள்