ஒரு சிறிய விதையின் உழைப்பு பிரமிப்பு ! கவிஞர் இரா .இரவி !
ஒரு சிறிய விதை
கீழும் மேலும் பயணித்தது !
கீழே வேர் விட்டு
சத்து ஈட்டியது !
மேலே முளை விட்டு
இலைகள் விட்டு கிளைகள் விட்டு
பூக்கள் பூத்து காய்கள் காய்த்து
கனிகள் வழங்கியது !
நிற்க நிழல் தந்தது !
சுவாசிக்க காற்றும் தந்தது !
உயர் திணையான மனிதனோ !
நன்றி மறந்து பரிசளித்தான் !
கோடாரி !
கருத்துகள்
கருத்துரையிடுக