மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !


மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்
பயிலரங்கம் நடைப்பெற்றது. தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர்எ .எஸ்.ராஜராஜன் வரவேற்றார் .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார்.
ஒருங்கினைப்பாளார் 
திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .
திருவாளர்கள் ஜோதி மகாலிங்கம்  C.ராஜேந்திரன் , இராம மூர்த்தி ,ஆ . முத்து  கிருஷ்ணன் ,சரவணன், பிரபுராம்
வாழ்த்துரை .வழங்கினார்கள். விஞர் கே .விஸ்வநாதன்
  தன்னம்பிக்கை தொடர்பான கவிதைவாசித்தார் . மன நலம் சற்று குன்றினாலும் மன வளம் குன்றாத
ஜோ .சம்பத் குமார் பிறந்த நாள் கொண்டாப் பட்டது .

திரு .ஹுசைன் இஷ்டப்பட்டு படிப்பது எப்படி என்ற தலைப்பில்
தன் முன்னேற்றப்    பயிற்சி அளித்தார். தொடந்து படித்துக்   கொண்டே இருக்காமல் 50 நிமிடங்கள் படித்து விட்டு பின் முடி வைத்து 10 நிமிடங்கள் படித்ததை சிந்தித்துப் பார்த்து படித்தால் ,சிந்தையில் பதியும் .படிக்க இடம் முக்கியம் தொலைக்காட்சி  அருகே அமர்ந்து படிப்பதை தவிர்த்து  விடுங்கள் .தனி அறையில்  கவனமுடன் படித்தால் பயன் பயக்கும் .படிப்பது தொடர்பாக பல்வேறு பயனுள்ள தகவல்கள் தந்து பயிற்சி அளித்தார் .
    
கவிஞர் இரா .கல்யாண சுந்தரம் நன்றி கூறினார் . மதுரை தன்னம்பிக்கைவாசகர் வட்டத்தினர்  கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .


-

கருத்துகள்