ஹைக்கூ ! ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! ( சென்ரியு  ) கவிஞர் இரா .இரவி !


திறந்துவிட்டும் 
பறக்கவில்லை   
சோதிடக்  கிளி ! 

சுமந்து சென்றார்கள் 
நிகழ்கால் பிணத்தை 
வருங்கால பிணங்கள் !

உணர்த்தியது 
நிலையாமை 
உதிர்ந்த இலை !

முகத்திற்கு அழகு 
செலவில்லா நகை 
புன்னகை !

சிதறிய தங்கம் 
அல்ல முடியவில்லை 
அந்தி வானம் !

அதிர்வை ஏற்படுத்தியது 
பேச்சைவிட 
மவுனம் !

ஏமாறுவதில்லை  
வண்டுகள் 
செயற்கைப் பூ !

சுமாரானவளும் 
அழகிதான் 
காதலனுக்கு ! 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்