காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !

காவியக் கவிஞர் வாலியே !   கவிஞர் இரா .இரவி !

காவியக் கவிஞர் வாலியே !
உந்தன் மரணம் எங்களுக்கு வலியே  !

மாலுமி இழந்த கப்பல் போல நாங்கள் 
மட்டற்ற கவிஞரை இழந்து தவிக்கிறோம் !

வாலிப வாலி என்பது உண்மை !
வாலிபக்கவியை எண்பது கடந்தும் எழுதியவர் !

புதியவானம் புதிய பூமி என்று எழுதி !
புத்துணர்வை விதைத்தவர் வாலி !

'ஏமாற்றாதே ! ஏமாறாதே !என்று எழுதி !
எமக்கு மனிதநேயம் கற்பித்த வாலி !

கண் போன போக்கிலே கால் போகலாமா ?
காளையரை நெறிப் படுத்திய  வாலி !

தரை மேல் பிறக்க வைத்தான் என்று எழுதி !
துயரில் வாடும் மீனவர்களின் கண்ணீர் பாடிய வாலி !

காற்று வாங்கப் போனேன் கவிதை வாங்கி வந்தேன்  ! 
காற்றில் பாட்டில் கலந்து என்றும் நின்ற வாலி !

அக்கிரகாரத்தில் பிறந்த அதிசய மனிதர் வாலி !
அய்யா பெரியார் பற்றியும் கவி வடித்த வாலி !

.

கருத்துகள்