மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்    பயிலரங்கம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்
பயிலரங்கம் நடைப்பெற்றது. தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர்எ .எஸ்.ராஜராஜன் வரவேற்றார் .
தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பார் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .
திருவாளர்கள் ஜோதி மகாலிங்கம் ,ஜி .ராம மூர்த்தி ,   
ஆ .முத்துக் கிருஷ்ணன் , சந்துரு  வாழ்த்துரை வழங்கினார்கள்கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,
  தன்னம்பிக்கை  கவிதைவாசித்தார் .நாவல் ஆசிரியர் ,வெள்ளைசாமி நாடார் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் ( ஒய்வு ),பேராசிரியர் முனைவர் எம் .பெர்னாட்ஷா அவர்கள் ,இப்படியும் பார்க்கலாம் என்ற தலைப்பில்   தன் முன்னேற்றப்    பயிற்சி அளித்தார் . 

 கவிதை ஆற்றல் வாழ்நாளில் பல நேரங்களில் உதவியது .நீங்களும் உங்களிடம் உள்ள ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள் .M.PHILL படிக்க இடம் கிடைக்காத காலத்தில் எனக்கு இடம் கிடைக்க காரணம் என் கவிதை .5 நாவல்கள் எழுதிய அனுபவம் பேராசிரியர் பணி  கிடைக்க காரணமானது  . இப்படி இலக்கியம் வாழ்வில் பல்வேறு தருணங்களில் எனக்கு உதவி உள்ளது .நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்க முடியும் .என்று கூறி மிகச் சிறப்பாக பயிற்சி அளித்தார்கள் .

.திருவாளர்கள் கார்த்திகேயன்  பிரபுராம் , சரவணன் ,ஜான் உள்ளிட்ட மதுரை தன்னம்பிக்கைவாசகர் வட்டத்தினர்  கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .திரு. சம்பத்  நன்றி கூறினார் 
-- 

.

கருத்துகள்