என்றும் மறைவு உனக்கில்லை ! கவிஞர் இரா .இரவி !

என்றும் மறைவு உனக்கில்லை !  கவிஞர் இரா .இரவி !

சௌந்தரராஜன் என்பது பெயர் மட்டுமல்ல !
சௌந்தரமான குரலின் ராஜன் நீ !

உனது தாய் மொழி தமிழ் இல்லை !
உச்சரிப்பில் உச்சமே உன் எல்லை !

உனது தாய் மொழி சௌராஷ்டிரம் மொழி !
உனது வாய் மொழி செம்மொழி தமிழ் மொழி !

கவியரசு கண்ணதாசனின் வைர  வரிகளை !
காதுகளில் தேனாகப் பாய்ச்சியவன் நீ !

கவியரசு கண்ணதாசனின் கருத்துக் கல்லை !
கண் கவரும் சிலையாக வடித்த சிற்பி நீ !

மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களிடமும் 
முத்திரைப் பதித்த சகலகலா வல்லவன் நீ !

எம் .ஜி .ஆர் . சிவாஜி இரு துருவத்திற்கும் !
இரண்டு குரலில் இனிமையாகப் பாடிய ஒருவன் நீ !

பாட்டுக் கோட்டையான பட்டுக்கோட்டை 
பாடலுக்கு பட்டுக் கட்டியவன் நீ !

மக்கள் திலகம் எம் .ஜி .ஆருக்கு  நூறு சதவிகிதம்  !
முற்றிலும் என்றும் பொருந்தியது உந்தன் குரலே !

வேறு பலர் அவருக்குப் பாடி ப் பார்த்தார்கள் !
விரும்பவில்லை ரசிகர்கள்  கூட்டம் !

செவாலியர் சிவாஜியின் சிறப்பான நடிப்பை !
சிம்மக்குரலில் கர்ஜித்துப் பாடியவன் நீ !

யாரை நம்பி நான் பிறந்தேன் பாடலின் மூலம் !
யாருக்கும் பிடித்தவன் ஆனாய் நீ !

மலர்ந்து மலராத பாடல் மூலம் !
மக்கள் மனதை கொள்ளை அடித்தவன் நீ !

பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி !
கோடிகளுக்கு மேல் ரசிகர்களை உனக்கு !

தற்கொலைக்கு முயன்றாய் முன்பு ஒருமுறை !
துடித்துப் போனோம் கேள்விப் பட்டு !

தானாகவே மரணம் வந்தது உன் உடலுக்கு !
தனி இடம் உண்டு என்றும் உன் குரலுக்கு !

மதுரையில் மாநாடுப் போல நடந்தது !
மண்ணின் மைந்தன் உந்தன்  பாராட்டு விழா !

ஒலிநாடாவிற்கும் உனது இசை நிகழ்ச்சிக்கும் !
ஒரு வேறுபாடு கூட என்றும் இருந்ததில்லை !

படிக்காத பாமர்கள் பலருக்கும் தமிழ் 
படிப்பித்த பாடல் ஆசான் நீ !

உழைப்பாளிகளின் உதட்டிலும் உன் பாட்டு !
படிப்பாளிகளின் உதட்டிலும் உன் பாட்டு !

ஒரு காலத்தில் நேயர்களின் சொர்க்கமாக இருந்த !
இலங்கை வானொலியில் எப்பவும் ஒலித்தது உன் பாடலே !

.ஒப்பற்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடி !
உலகத் தமிழர்களை எழுந்து நிற்க வைப்பவன் நீ !

உயிர் உன் உடலை விட்டு பிரிந்திட்டப்  போதும் !
உயிராய் வாழும் ரசிகர்கள் உள்ளத்தில் உன் பாடல் !

உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும் !
பாடலால் என்றும் வாழ்வாய் எங்களிடம் !


-- 

.



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்

  1. DEAR POET RAVI

    WONDERFULLY WRITTEN. I ENJOYED EVERY WORD OF IT.

    SOUNDARA RAJAN IS A LEGEND. NO SINGER CAN EQUAL HIM.

    NEARLY FIFTY YEARS AGO HE CAME TO SRI LANKA AND I INTERVIEWED FOR THE LEADING TAMIL NEWSPAPER. DURING
    THE INTERVIEW I ASKED HIM TO SING. HE IMMEDIATELY SANG TWO SONGS. IT IS STILL VIBRATING IN MY EARS. HE IS NOT A PROUD PERSON. HE LIVED FOR THE MUSIC. HE HIMSELF ENJOYED IT. HIS VOICE WILL LIVE WITH LOVERS OF MUSIC FOREVER.

    YOU HAVE BROUGHT OUT CERTAIN FACTS ABOUT HIM. IT IS GOOD. PEOPLE SHOULD KNOW ABOUT HIS GREATNESS.

    PON BALASUNDRAM ponbala9294@yahoo.com

    --

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக