தவம் ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தவம் !

நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !

viji.masi@gmail.com

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மக்கள் வெளியிடு ,49 உனிசு அலி சாகிப் தெரு ,எல்லீசு ந்சாலை ,சென்னை .2.
 makkalveliyeedu@yahoo.com

 திரு மே .து .ராசுகுமார் அவர்களின் பதிப்புரை ,தஞ்சை திரு .மா .ராசப்பா
அவர்களின் அணிந்துரை ,திரு ஆ .முருகரசன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு
தோரண வாயில்களாக  உள்ளன .16 முத்தான , சத்தான கட்டுரைகளின் தொகுப்பு நூல்
.நூல் ஆசிரியர் விஜிமா அவர்களின் என்னுரை மகாகவி பாரதியாரின்
மனதி லுறுதி வேண்டும் !
வாக்கினிலே யினிமை வேண்டும் !
என்ற வைர வரிகளுடன்  தொடங்கி உள்ளார்கள் .

நூல்  ஆசிரியர் விஜிமா அவர்களின் தவத்திற்கு உறுதுணையாக இருந்த மகன்கள்
இளங்கோ ,பாரதி ,திருஞானசம்பந்தன் ,மருமகள் ராதிகா ஆகியோருக்கும் ,என்
தவத்தில் தலையிடாத என் இனிய கணவருக்கும் நன்றி என்று எழுதி உள்ளார்கள்
.நூல் வெளி வந்த ஆண்டு 2006.அப்போது ஒரு மருமகள் மட்டும் இருந்ததால் அவர்
பெயர் மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள் .தற்போது மூன்று  மருமகள்கள் வந்து
விட்டதாக சொன்னார்கள் .தனது மகன்களுக்கு மிக நல்ல தமிழ்ப் பெயர்கள்
சூட்டி உள்ளது நூல் ஆசிரியரின் தமிழ்ப் பற்றை பறை சாற்றும் விதமாக உள்ளது
.பாராட்டுக்கள் .இப்பொதெல்லாம் ரமேஷ் ,சுரேஷ் ,ஷ்,ஷ் என்று பெயர்
சுட்டுவதே நாகரீகம் என்று கருதுகின்றனர்

தன்னம்பிக்கை நூல்கள் தன் முன்னேற்ற நூல்கள் நிறைய தற்போது வருகின்றன
.இந்த நூல்ஏழு ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட  தன்னம்பிக்கை நூல்.மனிதவள
ஆற்றலை மேம்படுத்த அறிவுரை கூறும் அற்புத நூல் .நூல் ஆசிரியருக்கு
வேண்டுகோள் விரைவில் உங்கள் நூல்கள் அனைத்தையும் மறுபதிப்பு செய்து
வெளியிடுங்கள் .

.பயனுள்ள பல கருத்துக்களின் பொக்கிசமாக உள்ளது .நூலில் உள்ள கருத்தக்கள்
அனித்தும் சிறப்பு என்றாலும் முத்தாய்ப்பாக உள்ள சில வரிகள் மட்டும்
உங்கள் பார்வைக்கு இதோ !

" மனிதன் ஒருவனால் மட்டுமே சிந்தித்துச் செயல் பட முடியும்
.சிந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனாலும் சாதிக்க இயலும் !சிந்திக்கும்
எல்லோராலும் சாதனை படைக்க முடியுமா என்ன ? 90%முடியும் !சிந்தனையை
ஒருமுகப்படுத்திச் செயல்பட்டால் சிந்தனை கை கூடும் .

இந்த ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனைச் செயல்பாடுதான் தவம் ஆகும் .நாமும்
நமது  சிந்தனைச் செயல்பாட்டிற்காக எண்ணங்களை  நிறைவேற்றுவதற்காக' தவம் '
இருக்க வேண்டும் .ஆம் ; தவம் மேற்கொள்ள வேண்டும் ."

உலகப் பொது மறையான திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டி உள்ளார்கள் .
 " இலட்சியத்தை அடிய வேண்டும் என்ற ஒரு வெறி அல்லது மனதுக்குள் ஒரு
அக்னிச் சுடர் இருக்க வேண்டும் ."
இந்த வரிகளை நாம் கடை  பிடித்து நடந்தால் வாழ்வில் வெற்றிப் பெறலாம்
.இளைய தலைமுறையினர் பலர் எந்தவித லட்சியமும் இன்றி ஏனோ தானோ என்று
விரக்தியுடன் வாழ்ந்து வருகிண்ட்னர் .அவர்கள் படிக்க வேண்டிய நூல் இது .
படித்தால் உங்களுக்குள் ஒரு மாற்றம் நிகழும் லட்சியம் பிறக்கும் .

வெளிநாடுகளில் பகுதி நேர வேலை பார்த்துக் கிடைக்கும் பணத்தில்   படித்து
சாதித்தது வெற்றிபெற்றவர்களின் விபரங்கள் நூலில் உள்ளது .நம்மை நாமே
மதிப்பீடு செய்து கொள்ளும் உத்தியை விளக்கி உள்ளார்கள் .கட்டுரையில்
சொல்லாத பொருளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துப் பொருளிலும்
கருத்துக்கள் உள்ளன ..நூல் ஆசிரியர் விஜிமா அவர்கள் அறிவியல் புயல்
அப்துல் கலாம்  அவர்களை பல முறை சந்தித்து உரையாடி இருக்கிறர்கள் .கவிஞர்
வைரமுத்து அவர்களையும் சந்தித்து உரையாடி இருக்கிறர்கள் .பல்வேறு
நாடுகளில் வாழ்ந்து இருக்கிறார்கள் .நிறைய நூல்கள் ஆங்கிலம் ,தமிழ்
இரண்டு மொழிகளிலும் படித்து இருக்கிறார்கள் .ஆழ்ந்த அனுபவ  அறிவினைக்
கொண்டு மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள் .

சமுதாயத்திற்குப் பயன்படும் விதத்தில் நூல் எழுதி உள்ள்ளர்கள் .எண்ணிப்
பார்க்க வியப்பாக உள்ளது .தமிழக சட்டமன்றத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்த
அரசு வேலையை குழந்தைகள் நலனுக்காக விட்டுவிட்டு அயல் நாடுகள் சென்று
.மகன்களைப் படிக்க வைத்து பெரிய பணிகளில் அமரவைத்துவிட்டு
,குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு ,நேரம் ஒதுக்கி எழுதிக் கொண்டும்
,இலக்கியப் பணியிலும் ஆர்வம் காட்டி தொடர்ந்து நூல்கள் எழுதி வருவது
சாதனைதான் .அரசுப்பணியை விட்டதும் நன்மைதான் .அதிலேயே இருந்து இருந்தால்
இவ்வளவு நூல்கள் எழுதி இருக்க முடியாது என்பது என் கருத்து .

கட்டுரைகளுக்கான தலைப்பே கவித்துவமாக  உள்ளன .காரணம் நூல் ஆசிரியர்
முதலில் கவிஞர் பிறகுதான் எழுத்தாளார் .இந்நூலில் உள்ள தலைப்புகளை ஆய்வு
செய்து முனைவர் பட்டம் பெற்று விடலாம் .

தலைப்புகளைப் பாருங்கள் .
தவம் என்றால் ,இலட்சியத்தை நோக்கி ,நம்மை நாமே மதிப்பிடுதல் ,மனதின்
தேடலை அறிந்து ,உன்னை உணர்த்தி விடு ,திட்டம் தீட்டு ,முடியும் என்றே
முழங்கிடு ,சோதனைகளை எதிர்கொள் ,நடந்துகொண்டேயிரு ,வாழ்க்கையே ஒரு
கல்விதான் ,நற்பண்புகளை வளர்த்துக் கொள் ,தியானம் ,மனம் இருந்தால்
,தாழ்வு  மனப்பான்மையை அகற்றுக , கால நேரம் பார்த்து நடக்கணும் ,உனக்குள்
போராடு .
தலைப்புகளைப் படித்தாலே அதன் உள்ளடக்கம் உங்களுக்கும் விளங்கும் .

நூலில் ஒரு ராணுவ வீரர் ஒரு தாயையும் ,ஒரு சகோதரியையும் காப்பாற்றி தன
ஒரு கால் இழந்த உண்மை நிகழ்வு நெகிழ்ச்சி .தன்னம்பிக்கை தரும் மிக நல்ல
நூல் .இந்த நூல் படிக்கும் முன் இருந்த மனநிலையும் படித்து முடித்தப்பின்
உள்ள மனநிலையின்  மாற்றம்தான் நூலின் வெற்றி .இந்த நூல் பற்றி
சுருக்கமாகச்  சொல்வதென்றால், இந்த நூல் படிக்க என் தவம் செய்தேனோ !


--

கருத்துகள்

கருத்துரையிடுக