ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !


ஹைக்கூ ( சென்றியு  ) கவிஞர் இரா .இரவி !

மழையில் நனைந்தும் 
வண்ணம் போகவில்லை 
வண்ணத்துப்பூச்சி !



வானவில் பறந்தது 
மண்ணில் 
வண்ணத்துப்பூச்சி !

அம்புகள் இன்றி 
வானில் தனியாக 
வானவில் !

ஓட்டுனர் இன்றி 
பயணமானது 
ரயில்பூச்சி !

கட்டியது வீடு 
சிறு துரும்பில்  
குருவி !

பறவையின் எச்சம் 
விழுந்த மிச்சம் 
விருட்சம் !

தடம் மாறவில்லை 
சென்றன வரிசையாக 
எறும்புகள் !

வரும் முன்னே 
வந்தது வாசம் 
என்னவள் !

கவனிக்கவில்லை உச்சரிப்பை 
கவனித்தான் உதட்டசவை 
காதலன் !

உதட்டு முத்தத்தை விட 
வலிமையானது 
நெற்றியில் முத்தம் !

அழகான சேலை 
குறைந்தது அழகு 
அவள் அணிந்ததும் !




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்